Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: நட்ட கல்லும் பேசுமோ?
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
தலையங்கம்

நட்ட கல்லும் பேசுமோ?

Last updated: February 23, 2024 3:08 pm
Published: February 23, 2024
SHARE

“அயோத்தி ராமன் கோவில் தினமும் ஒரு மணிநேரம் மூடப்படும்” என்று தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். “கோவில் கருவறையில் உள்ள குழந்தை வடிவ ராமனுக்கு 5 வயது தான் ஆகிறது. காலை 4 மணிக்கு தூக்கத்தில் கண்விழிக்கும் அவரால் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு இருக்க முடியாது” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. நாகரா கட்டடக்கலை நுட்பத்தில் சிற்ப தூண்களுடன் ராமன் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் குடமுழுக்கும் நடந்தது.

22.1.2024 அன்று மதியம் 12.15 மணி முதல் 12.45 மணிக்குள் நடந்த குட முழுக்கில் பிரதமர் மோடி பங்கேற்று கோவிலில் நிறுவப்பட்டுள்ள 5 வயது பால ராமர் சிலைக்கு சடங்குகள் செய்து வைத்தார். அதன்பிறகு சிலையின் கண்கள் திறக்கப் பட்டன. தற்போது பக்தர்கள் கோவிலில் ‘தரிசனம்’ செய்து வருகின்றனர்.
கோவில் கருவறையில் நிறுவப்பட்டுள்ள இந்த 5 வயது பால ராமன் சிலையை கருநாடகா மாநிலம் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செய்துள்ளார். 51 அங்குல உயரம் 200 கிலோ எடையில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ராமன் விஷ்ணுவின் அவதாரமாக உள்ளார். இந்நிலையில் தான் ராமன் சிலையை சுற்றி விஷ்ணுவின் 10 அவதார வடிவங்கள் சிற்பமாக இடம் பெற்றுள்ளன.

குடமுழுக்கன்று பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப் படவில்லை. பிரதமர் மோடி உள்பட முக்கிய பிரமுகர்கள் மட்டுமே தரிசனம் செய்தனர். அதன்பிறகு ஜனவரி 23ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் ஏராளமான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அதிகாலையிலேயே பக்தர்கள் கோவில் அருகே குவிந்து தரிசனத்துக்கு தயாராகி விடுகின்றனர்.

Also read

தலையங்கம்
திருப்பதி லட்டு: உயிரோடு விளையாடும் விபரீதம்!
ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் பின்னணி

இந்நிலையில் தான் “தினமும் அயோத்தி ராமன் கோவில் ஒரு மணி நேரம் மூடப்படும்” என கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “அயோத்தி ராமன் கோவிலில் உள்ள ராமன் 5 வயது குழந்தையாக இருக்கிறார். அவரால் நீண்ட நேரம் கண்விழித்து இருக்க முடியாது. அவருக்கு ஓய்வு என்பது வழங்கப்பட வேண்டி உள்ளது.
இதனால் கோவில் கதவுகளை தினமும் ஒருமணிநேரம் மூடி வைக்க அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. அதன்படி மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை கோவில் கதவுகள் சாத்தப்பட்டு குழந்தை ராமனுக்கு ஓய்வு அளிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
இது குறித்து புத்தியைப் பயன்படுத்தும் எவருக்கும் சில கேள்விகள் இயல்பாகவே எழும்.

(1) கடவுளுக்கு உருவம் கிடையாது என்று சொல்பவர்களுக்கு ராமன் சிலை எங்கிருந்து வந்தது?
(2) பாலராமருக்கு ஓய்வு தேவைப்படுகிறது. குழந்தை ராமன் என்பதால் அவரால் கண் விழித்து இருக்க முடியாதாம். அதனால் மதியத்தில் ஒரு மணி நேரம் ஓய்வு தேவைப்படுகிறதாம்!

இப்படியாகக் கதைகள் நீண்டு கொண்டு போகின்றன. அதுவோ சிலை – கண் விழித்துக் கொண்டு இருக்க முடியாது. அதனால் இடையில் ஒரு மணி நேரம் ஓய்வு தேவைப்படுகிறதாம். ஓய்வு என்றால் பக்கத்தில் படுத்துறங்க ஏதாவது கட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா? நட்ட கல்லு உருவம் அப்படியேதானே இருக்கிறது – இதில் கண் விழிப்பு – ஓய்வு என்பது எல்லாம் எங்கிருந்து குதித்தது?
“நட்ட கல்லும் பேசுமோ” என்று பத்திரகிரியார் என்ற சித்தர் பாடினார்.
கடவுளுக்கு உயிர் கொடுப்போர் யார்? எண்ணற்ற சிலைகளை உருவாக்கி வரலாறு படைத்த பிரபல சிற்பி கணபதிஸ்தபதி என்ன கூறுகிறார்?
“ஒரு கடவுள் சிலையை வடிவமைக்கிறதுன்னா சும்மாவா? யார் பார்த்திருக்கிறாங்க கடவுளை? அவர் எப்படி இருப்பார்னு யாருக்குத் தெரியும்? எங்களால மட்டும் எப்படி அத்தனை தத்ரூபமா ஒரு கல்லுல அவரைக் கொண்டு வர முடியுது? கோயிலுக்குப் போன உடனே அந்தச் சிலையைப் பார்த்து ஏன் அத்தனைப் பரவசப்படறீங்க? நீங்க, அனுபவிக்கிற பரவசத்தை, பக்தியைக் கொண்டுவரணும்னா ஒரு கல்லு சிலையா மாறணும். அந்தக் கல்லுக்கு உயிர் வரணும். அப்பத்தான் கையைக் கூப்பி வணங்க முடியும். அந்த உயிரை யாரு கொடுக்குறாங்க? நாங்கதானே? எங்ககிட்ட அப்படி என்னதான் வித்தை இருக்குன்னு தெரிஞ்சிக்க வேண்டாமா?”

(பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி, 11.6.2006 ‘கல்கி’ இதழில்),

கடவுளை உண்டாக்கியவர்கள் யார்? என்று இப்பொழுது விளங்குகிறதா?

Ad imageAd image
உச்சநீதிமன்ற நீதிபதி கவாயின் கருத்தாழம்!
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு “தமிழ்ச் செம்மொழி”– மாபெரும் கண்காட்சி! ஜூன் 9 வரை நீட்டிப்பு!
‘‘பெண்கள் பலகீனமானவர்கள்’’ என்ற  பொதுப் புத்தி ஒழிக்கப்பட வேண்டும்!  
செல்வம் சேர்த்தால்
எதிலும் மதவாதக் கண்ணோட்டமா
TAGGED:அயோத்தி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?