கல்லக்குறிச்சி முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பெரியார் நேசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்

1 Min Read

கல்லக்குறிச்சி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவ ரும், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பெரியார் நேசன் (வயது 94) இன்று (22.2.2024) காலை 9 மணி அளவில் மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரி தும் வருந்துகி றோம். 30 ஆண்டுகாலம் கல்லக்குறிச்சி நகரக் கழகத் தலைவராகவும், 30 ஆண்டு காலம் ஒன்றிய கழகத் தலைவராகவும் பொறுப்பேற்று அருந்தொண்டாற்றியவர். அவர்தம் அரும்பெரும் இயக்கத் தொண்டினைப் பெருமை யுடன் நினைவு கூர்கிறோம்.
அவர் மறைவால் பெருந்துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும். கழகத் தோழர் களுக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.விரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *