விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழப்பு ஒன்றிய அரசுக்கு ராகுல் கண்டனம்

1 Min Read

புதுடில்லி,பிப்.22- வேளாண் விளை பொருட் களின் குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும் மற்றும் வேளாண் கடன் தள் ளுபடி உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி, விவசாய சங்கங்கள் டில்லி நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை கடந்த 13.2.2024 அன்று தொடங்கின.
இந்நிலையில் பஞ்சாப்-அரியானா எல்லையில் நேற்று (21.2.2024) நடந்த போராட்டத்தில் பங்கேற்ற விவ சாயி ஒருவர் காவல்துறையினருடன் நடந்த மோதலில் உயிரிழந்தார். இதை வன்மையாக கண்டித்துள்ள விவசாய அமைப்புகள், தற்போதைய நெருக்கடிக்கும், உயிரிழப்புக்கும் ஒன்றிய அரசு மட்டுமே காரணம் என குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில் விவசாயி உயிரிழப்பு விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில்,
‘கானவுரி எல்லையில் விவசாயி சுப்கரன் சிங் உயிரிழந்த செய்தி இதயத்தை நொறுக்கியுள்ளது. அவரது குடும்பத்துக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள் கிறேன். மோடியின் ஆணவத்தால் கடந்த முறை 700-க்கு மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்தனர். தற்போது அது மீண்டும் அவர்களின் வாழ்க்கைக்கு எதிரி யாகிவிட்டது – நட்பு ஊடகங்களுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் பா.ஜனதாவிடம் விவசாயிகளின் கொலை பற்றிய கணக்கை ஒரு நாள் வரலாறு நிச்சயம் கோரும்” என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *