சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது அரவிந்த் கெஜ்ரிவால்

1 Min Read

புதுடில்லி,பிப்.21- சண்டிகர் மேயர் தேர்தல் நடந்த விதம் சர்ச்சையைக் கிளப்பி இருந்த நிலையில், இந்த தேர்தல் முடிவு செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தலில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு பற்றி டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
சில நேரம் தொல்லைகளுக்கு உள்ளாக் கப்படும் உண்மைகளை நிச்சயம் தோற் கடிக்க முடியாது. இந்தியாவின் அரசியல் சாசனமும், ஜனநாயகமும் இன்றைய உச்ச நீதிமன்றம் உத்தரவால் வெற்றி பெற்றுள்ளது.
இந்த தீர்ப்பை வழங்கிய உச்ச நீதி மன்றத்திற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த சிக்கலான சூழலில் உச்ச நீதிமன்றம் உத்தரவு மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. மட்டுமின்றி ஒன்றிய அரசின் செயல்பாட்டையும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
– இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *