இந்தியாவில் 105 பேருக்கு கரோனா

1 Min Read

புதுடில்லி,பிப்.21- கரோனாவின் புதிய வகை யான ‘ஜேஎன்.1’ வகை தொற்று, பல்வேறு நாடுக ளில் பரவி வருகிறது. இந்த வகை கரோனா வேகமாகப் பரவுவ தோடு, நோய்த் தடுப்பாற்ற லையும் ஊடுருவுமென கூறப் படுகிறது. கடந்த சில வாரங் களாக ஜே.என்.1 வகை உரு மாறிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவ ஆரம் பித்தது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 105 பேருக்கு புதிய வகை கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண் ணிக்கை 875 ஆக பதிவாகி யுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. காலை 8 மணி நிலவரப் படி பஞ்சாபில் ஒருவர் வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார்.
ஜேஎன்.1 வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்டவர்கள் 92 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று குணமாகி விடுகின்றனர் என தெரிவிக் கப்பட்டுள்ளது.
பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நோயிலிருந்து மீண்டவர் களின் எண்ணிக்கை 4.4 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது எனவும் மத்திய சுகாதார அமைச்சகம் இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *