இதிலும் ஜாதி பார்வையா? எஸ்.சி. – ஓ.பி.சி. மக்களை ராமன் கோயில் திறப்புவிழாவிற்கு ஒன்றிய அரசு அழைக்காதது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி

1 Min Read

அமேதி, பிப்.20 பாரத் ஜோடோ நியாய நடைப் பயணம் மேற்கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று (19.2.2024) உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் நகரில் இருந்து தனது பயணத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
அயோத்தி ராமன் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தொழிலதிபர்கள், பிரபலங்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. பழங்குடி மக்களின் முகமாக அறியப்படும் குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முக்குகூட அழைப்பு விடுக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட (ஓபிசி), பழங்குடிகள், ஏழைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வில்லை. நாட்டின் 73 சதவீத மக்கள் புறக்கணிக்கப்பட்டனர். விவசாயிகளின் பணத்தை பறித்து முதலாளி களின் பைகளை பிரதமர் மோடி நிரப்பி வருகிறார். சிபிஅய், அமலாக்கத் துறை உள்ளிட்ட ஒன்றிய அமைப்புகள் பாஜக அரசின் கைப்பாவையாக செயல்படுகின்றன. இவ்வாறு ராகுல் பேசினார். அமேதியில் ராகுல் காந்தி நுழைந்தபோது காங்கிரஸ், பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற் பட்டது. காவல்துறையினர் தடுப் புகளை அமைத்து பாஜக தொண் டர்களை கட்டுப்படுத்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *