மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை

1 Min Read

எழுச்சித்தமிழர் திருமாவளவன் பேட்டி

புதுடில்லி,பிப்.20- மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை என்றார் எழுச்சித்தமிழர் திருமாவளவன் அவர்கள்.
டில்லியில் நேற்று (19.2.2024) விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கூட்டணி பேச்சுவார்த்தைக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கூட்டணி யுக்திக்காக மாநாடு நடத்தியதாக நாங்கள் கருதவில்லை. சின்னத்தைப் பொறுத்தவரை இந்தத் தேர்தலில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. 100 சதவீத ஒப்புகைச் சீட்டுடன் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி 23ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இந்தியா கூட்டணியின் செயல் தந்திரங்கள் தேர்தலுக்கு பின்தான் நடைமுறைக்கு வரும். -இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *