பெரியார் பாலிடெக்னிக் மாணவிகள் கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டியில் சாதனை

1 Min Read

அரசியல், தமிழ்நாடு

வல்லம், அக். 6 – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சட்டமன்ற அளவி லான பேச்சுப் போட்டியில் இரண்டாவது மற்றும் மூன்றாம் பரிசினை வென்று சாதனை படைத்துள்ளனர்.

கலைஞர் நூற்றாண்டு விழா வினையொட்டி தஞ்சாவூர் மாவட்ட திமுக. பொறியாளர் அணி நடத்திய சட்ட மன்ற அளவிலான பேச்சுப் போட் டியில் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, அய் டி அய் போன்ற கல்வி நிறுவனங் களின் மாணவ, மாணவிகள் 03.10.2023 அன்று கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகரன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் டி.கே.ஜி.நீல மேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சன்.இராமநாதன் மற்றும் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.

வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவ, மாணவிகள் “கலைஞ ரும் தமிழும்” என்ற தலைப்பி லான பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டனர். இப்பாலி டெக்னிக் கல்லூரியின் இரண் டாமாண்டு கட்டட எழிற்கலை துறை மாணவி சி.முகிலா இராண்டாமிடம் வென்று ரொக்கப்பரிசு ரூ. 5,000/- மற்றும் சான்றிதழுடன் கூடிய கேடயம் பெற்றார். மேலும் இப்பாலி டெக்னிக் கல்லூரியின் முதலா மாண்டு கட்டட எழிற்கலை துறை மாணவி ஜெ.ஜெனிபர், மூன்றா மிடம் வென்று ரொக்கப் பரிசு ரூ. 3,000 மற்றும் சான்றித ழுடன் கூடிய கேடயம் பெற்றுக் கொண்டார்.

பேச்சுப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் வென்று இக்கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகனை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர். இரா. மல்லிகா பாராட்டினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *