Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை (2024-2025) தாக்கல்
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
அரசுதமிழ்நாடு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை (2024-2025) தாக்கல்

Last updated: February 19, 2024 5:36 pm
Published: February 19, 2024
தமிழ்நாடு
SHARE

தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சங்கள்!
4 பள்ளிக் கல்விக்கு ரூ.44,042 கோடி 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி
4 பழங்குடியினர் மேம்பாட்டுக்கு ரூ.1000 கோடி 4 விண்வெளிப் பூங்கா – நூலகங்கள் – சாலைகள் – மருத்துவம் – புதிய குடியிருப்புகள் – மாற்றுத் திறனாளிகள் மேம்பாடு என அடுக்கடுக்கான திட்டங்கள்!
பெரியார்- அண்ணா – கலைஞர் ஆகியோர் வழிகாட்டுதல்கள்
எங்களுக்குக் கலங்கரை விளக்கமாக இருக்கும்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கை (2024-2025) தாக்கல்

சென்னை,பிப்.19- தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ் நாடு அரசின் 2024-2025 ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தனது உரையில் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

நிதிப்பற்றாக்குறை ரூ.94,060 கோடியாக உயரும்.
மூலதன செலவினங்கள் ரூ.47,681 கோடியாக அதி கரிப்பு.
மதி இறுக்கம் (Autism) உடையோருக்கு ரூ.25 கோடியில் உயர்திறன் மய்யம்.
‘இன்னுயிர் காப்போம் நம்மைக் காக்கும் 48’ திட்டத்தின் கீழ், விபத்து நடந்த முதல் 48 மணி நேரத்தில் வழங்கப்படும் இலவச சிகிச்சைக்கான உச்சவரம்புத் தொகை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும்.
500 புதிய மின் பேருந்துகள் வாங்கப்படும்.

Also read

தமிழ்நாடு
தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தேசிய மருத்துவ ஆணையம் 500 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்தாண்டும் அனுமதியில்லை
மும்மொழித் திட்டத்தை ஒப்புக்கொண்டால்தான் மாநிலத்திற்குக் கல்வி நிதியைத் தருவோம் என்று கூறுவதா? ஒன்றிய பி.ஜே.பி. அரசு நடத்துவது கமிஷன் ஏஜெண்ட் வேலையா? பேர அரசியலா?

விரைவான வானிலை முன்னறிவிப்புகளை பெற இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஒப்பந்தம்.

1,400 புதிய தானியங்கி மழைமானிகளையும், 100 புதிய தானியங்கி வானிலை நிலையங்களையும் நிறுவ ரூ.32 கோடி நிதி ஒதுக்கீடு.
வெள்ளம், நில அதிர்வு உள்ளிட்டவற்றை கண் காணித்து பேரிடர் அபாய அளவை குறைக்க தொழில்நுட்ப மய்யம் அமைக்கப்படும்.
வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த ராமநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு சி-பேண்ட் டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) ரூ.56 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். ஜூன் மாதத்துக்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளை ஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட ஆவின் தொழிற் சாலைகளில் அதிநவீன தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும்.
முதலமைச்சரின் இளைஞர் திருவிழாக்கள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும். இதில் இளைஞர்களின் கலைத் திறமைகளை வெளிக்கொணர பேச்சு, பாட்டு, இசை, நடனப்போட்டிகள் நடத்தப்படும்.
திருச்சியில் நவீன வசதிகளுடன் புதிய சிறைச்சாலை கட்டப்படும்.
சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.24,000 கோடி ஒதுக்கீடு.
சமூக பாதுகாப்புத் துறை ‘‘குழந்தைகள் நலன் துறை” என பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
கோவையில் பூஞ்சோலை என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும்.

வேப்பூர் (கடலூர் மாவட்டம்), குஜிலியம்பாறை (திண்டுக்கல் மாவட்டம்), போச்சம்பள்ளி (கிருஷ்ணகிரி மாவட்டம்), சேந்தமங்கலம் (நாமக்கல் மாவட்டம்), கந்தர்வக்கோட்டை (புதுக்கோட்டை மாவட்டம்), கமுதி (ராமநாதபுரம் மாவட்டம்), நாட்றாம்பள்ளி (திருப்பத்தூர் மாவட்டம்), கூத்தாநல்லூர் (திருவாரூர் மாவட்டம்), செங்கம் (திருவண்ணாமலை மாவட்டம்), ஏரல் (தூத் துக்குடி மாவட்டம்) ஆகிய இடங்களில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்படும்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
500-க்கும் மேற்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளி கள், மூன்றாம் பாலினத்தவரைப் பணியில் அமர்த்தும் புதிய தொழில் நிறுவனங்களுக்கு ஊதிய மானியம் வழங்கப்படும்.
கடந்த 40 ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத சரக்கு பெட்டகம் மேம்படுத்தப்படும்
ரூ.665 கோடியில் 14 புறவழிச் சாலைகள் மற்றும் உயர்மட்ட மேம்பாலங்கள் அமைக்கப்படும்
சிவகாசி நகருக்கு வெளிவட்ட சாலை அமைக்கப் படும்.

திண்டுக்கல் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கப் படும்.

அவிநாசி முதல் மேட்டுப்பாளையம் வரையிலான சாலை 4 வழிச்சாலையாக மேம்படுத்தப்படும்.
சென்னை திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உள்ள போக்குவரத்து நெரிசலை குறைக்க நான்கு வழி உயர்மட்ட வழித்தடம் அமைக்க ஆராயப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் நலத்துறை சார்பில் இயங்கி வரும் பள்ளிகளில் ரூ.36 கோடியில் திறன் மேம்பாட்டு வகுப்புகள் தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் உலகத் தரம் வாய்ந்த முக்கிய சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு சட்டபூர்வ அமைப்பு உருவாக்க திட்டம். இது தொடர்பாக நடப்பு கூட்டத் தொடரில் சட்டமுன்வடிவு அறிமுகம்.
மெரினா, கடலூர் சில்வர் பீச் உள்ளிட்ட 8 கடற்கரை கள் மேம்படுத்தப்படும்.
தமிழ்நாட்டில் கடற்கரைகளை மேம்படுத்த நீலக் கொடி கடற்கரைச் சான்றிதழ் திட்டம் அறிமுகம்.
தூண்டில் வளைவுகள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு.
திருப்பரங்குன்றம், திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி செலவில் மாநிலத் தரவு மய்யம் மேம்படுத்தப்படும்.
தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த நியோ டைடல் பூங்காக்கள் மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு உண்டாகும்.
கடலோர வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும்.

அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த ரூ.1,675 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரி வாக்கம். சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக ரூ.12,000 கோடி ஒதுக்கீடு.
ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்ததும் மதுரை, கோவை மெட்ரோ திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
பரந்தூர், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ சேவையை நீட்டிக்க விரிவான செயலாக்க அறிக்கை தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டில் 3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மேம் படுத்தப்படும்.
பழங்குடியினத்தவரை மேம்படுத்த ரூ.1,000 கோடி செலவில் தொல்குடி என்கிற திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்படும்.

ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் 2 ஆம் கட்டப்பணிகளுக்கு ரூ.7,890 கோடி நிதி ஒதுக்கீடு. இத்திட்டம் மூலம் சுமார் 40 லட்சம் மக்கள் பயன்பெறுவர்.
குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.
தூத்துக்குடியில் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில் மற்றும் உந்து சக்தி பூங்கா அமைக்கப்படும்
மதுரையில் 25,000 சதுர அடியில் தொழில் புத்தாக்க மய்யம் அமைக்கப்படும்.
கோவை, மதுரையில் உலகளாவிய திறன் மேம்பாட்டு மய்யம் அமைக்கப்படும்.
முதலமைச்சர் தலைமையில் தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு இயக்கம் அமைக்கப்படும்.
பசுமை ஆற்றல் நிறுவனம் உருவாக்கப்படும்.

மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு.
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.440 கோடி நிதி ஒதுக்கீடு.
4 நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்.
மதுரையில் ரூ.345 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
திருச்சியில் ரூ.350 கோடியில் டைடல் பூங்கா அமைக்கப்படும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
‘தமிழ்ப் புதல்வன்’ என்ற புதிய திட்டத்துக்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு.
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு.
மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்பு வழங்க ரூ.35,000 கோடி நிதி ஒதுக்கீடு.
விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடி செலவில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் முதல்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.
சென்னை, கோவை, மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச வைஃபை வசதி அமைக்கப் படும்.
நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

நான் முதல்வன் திட்டத்தில் 100 கலை, பொறியியல் கல்லூரிகளில் ரூ.200 கோடிக்கு திறன் ஆய்வகங்கள்.
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மய்யங்கள் அமைக்கப்படும்.
ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மய்யம் அமைக்கப்படும்.
புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.

சுகாதார மய்யங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு
சென்னை, மதுரை, கோவையில் ரயில்வே, வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
சிப்காட் பகுதியில் பணிபுரியும் பெண்களின் குழந்தை கள் பாதுகாப்புக்காக குழந்தைகள் பாதுகாப்பு மய்யம் ஏற்படுத்தப்படும்.
பழங்குடி மக்களின் மொழி வளங்களை ஆவணப் படுத்த ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8.212 கோடி நிதி ஒதுக்கீடு.

தொழில்துறை 4.0 தரத்துக்கு 45 பாலிடெக்னிக் கல்லூரிகள் உயர்த்தப்படும்.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
கோவையில் ரூ.1,100 கோடி செலவில் புதிய அய்டி பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும்.
கோவையில் பிரம்மாண்ட நூலகம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.

நாமக்கலில் ரூ.358 கோடி, திண்டுக்கல்லில் ரூ.565 கோடி, பெரம்பலூரில் ரூ.366 கோடியில் புதிய கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம் ஊரகப் பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். இதற்காக, ரூ.600 கோடி ஒதுக்கீடு
புதுமைப்பெண் திட்டத்துக்காக ரூ.370 கோடி நிதி ஒதுக்கீடு.
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.

பள்ளிக் கல்வி துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.44,042 கோடி நிதி ஒதுக்கீடு.
மூன்றாம் பாலினத்தவரின் கல்லூரிக் கல்வி மற்றும் விடுதிகள் கட்டணத்தை அரசே ஏற்கும்.
ரூ.1,000 கோடியில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும். பேராசிரியர் அன்பழகன் திட்டம் என்கிற பெயரில் இது செயல்படுத்தப்படும்.
ரூ.300 கோடி மதிப்பீட்டில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும்.

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
சென்னையின் கோவளம், பெசன்ட் நகர், எண்ணூர் ஆகிய கடற்கரைகள் ரூ.100 கோடி மதிப்பீட்டில் அழகு படுத்தப்படும்.
தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும்.
தமிழ் மொழியை நவீனப்படுத்த கிமி உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.

ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும்.
கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னை யில் நடத்தப்படும்.

விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
ரூ.1,000 கோடி செலவில் சாலைகள் மேம்படுத்தப்படும்.
5 ஆயிரம் ஏரி, குளங்களை புனரமைக்க ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.365 கோடி நிதி ஒதுக்கீடு.
‘முதலமைச்சரின் தாயுமானவர்’ என்ற புதிய திட்டம் அறிமுகம்.

நிட்டி ஆயோக் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக் குடும்பத்தி னருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்க ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030-க்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் ஒதுக்கப்படும்.
சிங்காரச் சென்னை 2 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.

சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு
வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு
பூவிருந்தவல்லியில் ரூ.500 கோடியில் திரைப்பட நகரம்.
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி நிதி ஒதுக்கீடு.

காவிரி, வைகை, நொய்யல், தாமிரபரணி ஆறுகளை புனரமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு.
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
மகளிர் இலவச பேருந்து பயண ‘விடியல் பயணம்’ திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து திட்டம் மலைப்பகுதி களுக்கும் விரிவுபடுத்தப்படும்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், மக்களவை பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் எதிர்நோக்கப்படுவதால், வரும் 2024-2025 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதமே தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

“காட்சிக்கு எளியன், கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்”

என்ற திருக்குறளை மேற்கோள்காட்டி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு. தொடர்ந்து அவர் ஆற்றிய அறிமுக உரையில், “நூற்றாண்டு கண்ட இந்த சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வதில் மகிழ்ச்சி. இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதார பலம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு. 100 ஆண்டுகளில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, தமிழர்களை தலைநிமிர செய்தது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழர்களின் எண்ணங்களை அறிவிப்பாக மாற் றிடும் வகையில் நிதிநிலை அறிக்கை உரை அமையும். பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வழிநடத்திட வேண்டிய சூழலில் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம். ஆழி சூழ் தமிழ் நிலப் பரப்பில் அழையா விருந்தாளியாக அவ்வப்போது வரும் இயற்கைப் பேரிடர்கள் ஒரு பக்கம். கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப் பான்மை யோடு நடந்துகொள்ளும் ஒன்றிய அரசு மறுபக்கம். இதற்கிடையே, தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல உதவும் வரவு செலவு திட்டத்தை உருவாக்கிட வேண்டிய தேவைகள் எழும்போதெல்லாம் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வழிகாட்டுதல் மட்டுமே எங்களுக்கு கலங்கரை விளக்கமாக எங்களுக்கு அமைந்துள்ளன” என்றார்.

 

தமிழ்நாடு அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு

ரூ.3.48 லட்சம் கோடி

வருவாய் பற்றாக்குறை – ரூ.49,278.73 கோடி
ஊதியச் செலவினங்கள் – ரூ. 84,931 கோடி
ஊதியம் அல்லாத செலவினங்கள் – ரூ.15,013 கோடி
ஓய்வூதிய பலன்களுக்கான செலவுகள் – ரூ.37,663 கோடி
மானியங்கள், உதவி மானியங்கள் வழங்கு வதற்கான மதிப்பீடுகள் – ரூ.1, 46,908 கோடி
பொதுக்கடனுக்கான வட்டித்தொகை – ரூ.63,722 கோடி
மூலதனச் செலவினம் – ரூ.47, 681 கோடி
இழப்பீட்டுத் தொகை நீங்கலாக வருவாய் பற்றாக்குறை – ரூ. 34 ஆயிரத்து 834 கோடி
நிதிப்பற்றாக்குறை 3.44 சதவிகிதமாக குறைக்கப் பட்டுள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்த ஆண்டிலிருந்து தமிழ்நாடு அரசின் நிதிப் பற்றாக்குறை
2022-2023 நிதியாண்டு: 3.46%
2023-2024 நிதியாண்டு: 3.45%
2024-2025 நிதியாண்டு: 3.44%

 

பெரியார் சமூகநீதி புத்தொழில் வளர் மய்யம்!

பல்வேறு சமூக மேம்பாடு குறித்த தேவைகள், காலநிலை மாற்றம், அரசுத்துறை சார்ந்த சேவைகள் குறித்தான தீர்வுகளை உருவாக்கவும், அவற்றை செயல்படுத்தக்கூடிய ஆர்வமும் ஆற்றலும் மிக்க தொழில் முனைவோர்களைக் கண்டறிந்து, அந்நிறு வனங்களுக்குத் தேவையான வளங்களை ஒருங் கிணைத்துச் செயல்படுத்திடவும், பெரியார் சமூகநீதி புத்தொழில் வளர்மய்யம் (Periyar Social Justice Venture Lab)
ஒன்று உருவாக்கப்படும். சமூகத்தில் விளிம்புநிலையில் வாழும் மக்கள், பட்டியலின மற்றும் பழங்குடியினரால் தொடங்கி நடத்தப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு இந்த மய்யம் முன்னுரிமை அளிக்கும்.

நிதிநிலை அறிக்கை:
தொலைபேசியின் வாயிலாக முதலமைச்சருக்குத் தமிழர் தலைவர் பாராட்டு!

இன்றைய (19-2-2024) தமிழ்நாடு அரசின் நிதி நிலை அறிக்கையின் சிறப்பைப்பற்றி, மாண்பைப்பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டையும், வாழ்த்தினையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தொலைபேசியின் வாயிலாகத் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார்.

 

சட்டமன்றத்தில் இன்று
2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்!

சென்னை, பிப்.19 தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று (19-2-2024) காலை 10 மணியளவில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம்.தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டமன்றம் இன்று (19-2-2024) காலை தொடங்கியவுடன், பேரவைத் தலைவர் மு.அப்பாவு அவர்கள், 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்கள் பேரவைக்கு அளிப்பார் என அறிவித்தார்.
இதையடுத்து நிதியமைச்சர் தங்கம்.தென்னரசு அவர்கள், 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளைக் கொண்ட 165 பக்க அறிக்கையை பேரவையில் தாக்கல் செய்து, சுமார் 2 மணிநேரத்திற்குமேல் உரையாற்றினார்.

 

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன்!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத் தைச் சார்ந்த தொழில் முனைவோர்களின் பொருளா தார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 755 நபர்கள் 84 கோடி ரூபாய் மானியத்துடன் கூடிய 156 கோடி ரூபாய் கடன் வசதி பெற்றுப் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்குக் கிடைத்த வரவேற்பினைக் கருதி, திருத்த மதிப்பீடுகளில் கூடுதலாக 75 கோடி ரூபாய் நிதி வரும் 2024-2025 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு களில் இத்திட்டத்திற்காக 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், அண்மையில் அறிமுகப் படுத்தப்பட்ட சிவி கிக்ஷீவீsமீ என்ற புதிய திட்டத்தின் கீழ், தொழில் தொடங்குவதற்கு 35 சதவீத வட்டி மானியத் துடன் பத்து இலட்சம் ரூபாய் வரை தொழில்முனை வோர் கடன் பெறலாம். இத்திட்டத்தை நடைமுறைப் படுத்த வரும் ஆண்டில் 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

மகளிர் நலன்

“ஒரு சமூகத்தில், பெண்கள் அடையும் வளர்ச் சியைக் கொண்டே அச்சமூகத்தின் வளர்ச்சியை மதிப்பிட வேண்டும்” என்று உரைத்த அண்ணல் அம்பேத்கரின் வழியில், ஆணுக்கிங்கே பெண் நிகர் என்னும் சரிநிகர் சமத்துவப் பாதையில் மகளிர் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களைத் தீட்டி தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டிற்கே முன் னோடியாக பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல், அவர்களுக்கு விடியல் பயணத் திட்டம் வரை புதுமையான பல திட்டங்கள் தமிழ்நாட்டில் அறிமுகப் படுத்தப்பட்டன. அந்த வரிசையில் “சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்” என்ற இலக் கின்படி செயல்பட்டு அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம், ஒரு கோடியே பதினைந்து இலட்சம் குடும்பத் தலைவி களுக்கு ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் அவர்களுடைய வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்பட்டு வருகிறது.

 

தந்தை பெரியாரின் குடிநீர் வழங்கும் முன்னோடித் திட்டம்

105 ஆண்டுகளுக்கு முன்பே, 1919 ஆம் ஆண்டி லேயே, காவிரி ஆற்றில் இருந்து நீரேற்றம் செய்து, அய்ந்து இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் நீர்த்தேக்கம் செய்து, ஈரோடு நகரெங்கும் குழாய் பதித்து, பாது காக்கப்பட்ட குடிநீர் வழங்கும் முன்னோடித் திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக அறிமுகம் செய்து நிகழ்த்திக் காட்டியவர் அன்றைய ஈரோடு நகர்மன்றத் தலைவராகப் பதவி வகித்த தந்தை பெரியார் அவர்கள்.
‘‘மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என முழங்கி, தமிழ்ச்சமூகத்தை வழிநடத்திய தந்தை பெரியார். உள்ளாட்சி அமைப்புகளின் முதன்மையான பணியாக பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதை முன்னிறுத்தி, அத்திட்டத்தை வெற்றி கரமாக நடைமுறைப்படுத்தியும் காட்டினார் என்பது நமக்கெல்லாம் பெருமை. தந்தை பெரியாரின் வழியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாண்புமிகு முதல மைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 46 இலட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கியுள்ளது. மேலும், ஊரகப் பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்குப் பதிலாக, 365 கோடி ரூபாய் மதிப் பீட்டில் 2,000 புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் இந்த ஆண்டு அமைக்கப்படும்.
மாநகராட்சிப் பகுதிகளை அடுத்துள்ள விரிவாக்கப் பகுதிகளில், வரும் ஆண்டில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆண்டில் சுமார் 500 கோடி ரூபாய் மதிப் பீட்டில் தலைசிறந்த அறிவியல் நிறுவனங்களின் வழிகாட்டுதலுடன் மக்கள் பங்களிப்போடு 5,000 நீர்நிலைகளைப் புனரமைக்கும் பெரும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம்!

நகர்ப்புரப் பகுதிகளிலும், ஊரகப் பகுதிகளிலும் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் முழுமையான சமூகப் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்பு கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 230 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் பயன்பெறும் வகையில் திருமணக் கூடம், உள்விளையாட்டுக் கூடம், கற்றல் மற்றும் பயிற்சி மய்யம் போன்ற வசதிகள் கொண்ட 120 சமூகக் கூடங்கள் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

Ad imageAd image
தொகுதி மறுவரையறை பிரச்சினையில் தி.மு.க.வின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு அணி வகுக்கும்!
‘கேலோ இந்தியா’ திட்டம் தமிழ்நாட்டுக்கு மட்டும் ஓரவஞ்சனை!
ரூ.290 கோடி மதிப்பில் அமையவுள்ள திருச்சி நூலகத்திற்கு காமராசர் பெயர்
பொதுமக்கள், காவல் துறையினர் நலனுக்காக ரூ.54.36 கோடி நிதி ஒதுக்கீடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
அண்ணா பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பாடப்பிரிவுகள் மேற்படிப்புகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி 9ஆம் தேதி நடைபெறுகிறது
TAGGED:நிதிநிலை அறிக்கை
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?