திருவாரூர் கழகத் தோழர் பொன்.தேவநாதன் மறைவு

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருவாரூர், பிப். 18- திராவிடர் கழக திருவாரூர் மேனாள் மாவட்ட இளைஞரணி தலைவரும், மேனாள் திருவாரூர் ஒன்றிய செயலாளரும், சிறு வயது முதல் இயக்க பணிகளில் சிறப்பாக பணியாற்றிய வருமான பொன்.தேவ நாதன் (வயது 51) தனது வேலை நிமித்தமாக கும்பகோணத்தில் தனியாக தங்கியிருந்த போது கடந்த 11.02.2024 அன்று இரவு இறந்து உள்ளார். இரு நாட்களாக தொடர்பு இல்லாமல் இருந்ததால் 14.02.2024 புதன் அன்று நேரில் சென்ற போது இது தெரிய வந்தது. உடற்கூராய்விற் கும் பிறகு, அன்று மாலை 6.00 மணிக்கு சொந்த ஊரான திருவா ரூர் மாவட்டம், பழைய வலம் கொண்டு வரப்பட்டு மாலை 7 மணிக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இறுதி நிகழ்ச்சியில் கிராம மக்கள் மூடநம்பிக் கையான சடங்குகள் செய்ய முற்பட்ட போது, அவரது மகளும், கழக இளம் பேச்சாளருமான நர்மதா உறுதியாக எதிர்த்து,
தனது தந்தை உண் மையான திராவிடர் கழக தொண்டராகவே வாழ்ந்தார், எனவே அவ ரது இறுதி நிகழ்ச்சியும் கழக முறைப்படி எவ்வித மூடச் சடங்குகள் இல்லா மல் நடத்தப்பட வேண்டு மென உறுதிபட தெரிவித்தார். உடனே மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையில் கழக பொறுப்பாளர்கள் ஊர் மக்களிடம் பேசி, அவர் களை சம்மதிக்க வைத்து, எவ்வித சடங்குகள் இல் லாமல் உடலை எடுத்தது டன், அந்த ஊரில் முதல் முறையாக பெண்கள் சுடுகாட்டுக்கு வந்து, அவரது மகள் நர்மதா அவர்களே உடலுக்கு எரியூட்டினார்.

மறுநாள் கழக பொது செயலாளர் அன்புராஜ் இறந்த தேவநாதன் அவர்களது இணையர் கவிதா, மகள்கள் நந்தினி மற்றும் நர்மதா,மருமகன் சந்தோஷ் ஆகியோரைச் சந்தித்து ஆறுதல் கூறி னார். இந்த ஊரில் முதல் முறையாக ஒரு பெண்ணே தனது தந்தையின் உட லுக்கு எரியூட்டிய செய்தி பரபரப்பாகப் பேசப்பட் டது.

அனைத்து நிகழ்வுக ளுக்கும் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உறு துணையாக இருந்து சிறப்பாக செய்து கொடுத்தார். அவருக்கு கழகத்தின் சார் பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *