தஞ்சை தமிழரசி மறைவு

1 Min Read

நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கத்திடம் தமிழர் தலைவர் தொலைப்பேசி மூலம் ஆறுதல்

நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினர் எஸ்.எஸ். பழனி மாணிக்கம், மனிதநேயர் எஸ்.எஸ். இராஜ்குமார் ஆகி யோரின் சகோதரி தமிழரசி (வயது 67) (தந்தை பெரியா ரால் பெயர் சூட்டப்பட்டவர்) இன்று (17.2.2024) காலை காலமானார். கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி. அவர்களிடம் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.
மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு.இரா.குணசேகரன், மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், மாநகரத் தலைவர் ப.நரேந்திரன், செயலாளர் அ.டேவிட், கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், தஞ்சை தெற்கு ஒன்றிய செய லாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *