2023ஆம் ஆண்டில் மட்டும் பணியின்போது பலியான 99 பத்திரிகையாளர்கள் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

viduthalai
3 Min Read

நியூயார்க்,பிப்.16- அமெரிக்காவில் நியூ யார்க் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவருகின்ற பத்திரிகையா ளர்கள் பாதுகாப்புக்கான அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் பணியின்போது பத்திரிகையாளர்கள் 99 பேர் கொல்லப் பட்டுள்ளனர். பன்னாட்டளவில் பத்திரி கையாளர்களின் சுதந்திரம் மற்றும் பத்திரி கையாளர் மனித உரிமை பாதுகாப்புக்கான அமைப்பாக Committee to Protect Journalists (CPJ)  1981இல் தொடங்கப்பட்டு இவ் வமைப்பு இயங்கி வருகிறது. அவ்வமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் 99 பத்திரிகை யாளர்கள் கொல் லப்பட்டுள்ளதாகவும், பாலஸ்தீனத்தில் மட்டும் 74 பத்திரிகை யாளர்கள் பலியாகியுள்ளதாகவும் அதிர்ச் சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப் பினருக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆ-ம் தேதி போர் தொடங் கியது. தொடர்ந்து இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடங்கினர். இதில் ஏராளமான ராணுவ வீரர்களும், பொது மக்களும் உயிரிழந்தனர். இதுவரை மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண் ணிக்கை 28,663-ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை சுமார் 68,395 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக் கப்பட் டுள்ளது.

6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந் தைகள் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காசா வில் இருந்து செயல்படும் பயங்கரவாதி களுக்கு எதிரான போர் என இஸ்ரேல் இதனை பிரகடனப்படுத்தினாலும், இதில் பெரும்பாலும் உயிரிழந்து வருவது சாமானிய பொதுமக்கள் என்பது அதிர்ச் சியூட்டும் உண்மையாகும். அதேபோல இந்த போரில் ஏராளமான பத்திரி கையாளர்களும் உயிரிழந்துள்ளனர்.
இந்த போர் துவங்கியதில் இருந்தே ஏராளமான செய்தியாளர்கள் களத்தில் இருந்து போர் தொடர்பான செய்திகளை எடுத்துக் கூறி வருகின்றனர். அந்த வகையில் காசா பகுதியை சேர்ந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் வாயில் அல் தஹ்துத், தொடக்கம் முதலே போர் தொடர்பான தகவல்களை தான் பணி யாற்றும் தொலைக்காட்சிக்கு வழங்கி வருகிறார். இந்தப் போரில் தஹ்துத்தின் மனைவி, இரண்டு குழந்தைகள் உள்பட அவரது உறவினர்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆனாலும், களத்தில் இருந்து செய்திகளை வெளியிடுவதில் இருந்து பின் வாங்காமல் தஹ்துத் தொடர்ந்து பணியாற்றி வந்தார்.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த ஏவுகணை தாக்குதலின் போது இவருடன் பணியாற்றிவந்த ஒளிப்பதி வாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந் தார். உடனே அவரிடம் இருந்து கீழே விழுந்த கேமராவை எடுத்து, அந்த சம்ப வத்தை தஹ்துத் பதிவு செய்தார். இதில் அவர் படுகாயம் அடைந்ததை அடுத்து தற்போது கத்தாரில் உள்ள மருத்துவ மனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

ஆனால் அதன்பிறகும் மீண்டும் போரால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிக்கு திரும்புவதற்கு விருப்பம் தெரிவித் துள்ளார்.
இதேபோல பாலஸ்தீனத்தில் களத்தில் இருந்து செய்திகளை வெளியிட்ட பத்திரி கையாளர்கள் கிட்டத்தட்ட 74பேர் அதிகாரப்பூர்வமாக கொல்லப்பட்டுள் ளதாக பத்திரிகையாளர்களைப் பாது காக்கும் குழு (சிறியி) வெளியிட்டுள்ளது. மேலும் கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் உலக அளவில் 99 பத்திரிகை யாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், அதில் பாலஸ்தீனத்தில் மட்டும் 74பேர் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இது பல மடங்கு அதிகம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
20 ஆண்டுகள் நடைபெற்ற வியட்நாம் போரில் 63 பத்திரிகையாளர்கள் கொல் லப்பட்டனர்.
அதேபோல 7 ஆண்டுகள் நடைபெற்ற இரண்டாம் உலகப் போரில் 67 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட னர். இந்த நிலையில் கடந்த 4மாதங்களில் மட்டும் பாலஸ்தீனத்தில் 74 பத்திரி கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *