”ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது” உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!

2 Min Read

புதுடில்லி, பிப். 16- தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று ஆலை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு 14.2.2024 அன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”நீதிமன்ற உத்தரவுகளையும், அரசின் உத்தரவுகளையும் ஸ்டெர்லைட் நிர்வாகம் பின்பற்ற வில்லை” என தமிழ்நாடு அரசு வாதம் செய்தது. மேலும் ஆலை கழிவுகள் தற்போதும் ஆற்றில் கொட்டப்பட்டு உள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினர்.
அதேபோல், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக உச்ச நீதிமன்றம் 800 பக்க தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் எப்படி எல்லாம் விதிமுறைகள் நடந்துள்ளன என்பது தொடர்பாகத் தெளிவாக உயர் நீதிமன்றம் கூறியிருப்பதைப் பரிசீலிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வலியுறுத்தினர்.
பின்னர் உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆலை பாதுகாப் பாக செயல்படுகிறதா? இல்லையா? என்பது தொடர்பாக எந்த ஆய்வும் நடத்தாமல் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. ஆலையை மூடி ஆறு ஆண்டுகள் முடிந்து விட்டது. அரசும் ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒத்துக் கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா வேண்டாமா என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்” என கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 2018ஆம் ஆண்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது அ.தி.மு.க அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயர் நீதிமன்றங்களில் 13 கூடுதல் நீதிபதிகளை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரை
புதுடில்லி,பிப்.16- உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள 13 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழு ஒன்றிய அரசுக்குப் பரிந்து ரைத்துள்ளது.
டில்லியில் உச்ச நீதிமன்ற கொலீஜியம் குழுக் கூட்டம் 13.2.2024 அன்று நடைபெற்றது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஆந்திர உயர் நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதி களாக உள்ள மூவரை, அந்த உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்கப் பட்டது.
இதேபோல பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதி மன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றி வரும் 10 பேரை, அந்த உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமிக்க ஒன்றிய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டது என்று கொலீஜியம் குழு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *