அமைச்சரை வரவேற்று கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு
திருச்செந்தூர், பிப். 16- திருச்செந்தூரில் நேற்று (15.2.2024) மாலை விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலை, அம் பேத்கர் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அடிக்கல் நாட்டி சிறப்பித்த நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனி மொழி, மீன்வளம், நலன் மற்றும் கால் நடைத்துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருட்டிணன் ஆகியோருக்கு திரா விடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் மா.பால்இராசேந்திரம், மாவட்டத்தலைவர் மு.முனியசாமி,மாவட்டச்செயலாளர் கோ.முருகன், தூத்துக்குடி மாநகர இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் இ.திரவியம், உரந்தை பெரியார்மணி ஆகியோர் புத்தகம் வழங்கி வரவேற்றார்கள்.