இந்திய மக்கள் அனைவரையும் ஒரே இரவில் பீதியடைய வைத்து, பல நாள்கள் நடுத்தெருவில் நிறுத்தி, மோடி நடத்திய பொருளாதார நாடகமான ரூ.500, 1000 ரூபாய் பண மதிப்பிழப்பால், 99% பணத் தாள்கள் திரும்பி வந்துவிட்டன. கருப்புப் பணம் எல்லாம் வெள்ளையாக மாற்றப்பட்டது. கள்ள நோட்டுப் புழக்கத்தையும் தடுக்க முடியாமல், புதிதாக வெளியிடப்பட்ட 500 ரூபாய்த் தாள்களில் 101.93%-மும், 2000 ரூபாய் நோட்டுகளில் 54%-மும் கள்ள நோட்டுப் புழக்கம் அதிகமானதாகக் கடந்த ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கியும் அறிவித்துவிட்டது.
2000 ரூபாய் திரும்பப் பெறப்பட்டு, ஒட்டுமொத்த நாடகமே நாட்டின் பொருளாதாரத்தை நாசப்படுத் தியது தானே பா.ஜ.க. அரசின் அதிகபட்ச சாதனை?
ஒரே கேள்வி
Leave a Comment