கேரள மாநில கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு
திருவனந்தபுரம்,பிப்.16 -கேரள மாநிலம் கோழிக்கோடு நெடுமண்ணூரில் உள்ள ஒரு பள்ளியில் கடந்த
13-2-2024 இரவு பள்ளி மேலாளரின் மகன் ருதீஷின் தலைமையில் பா.ஜனதா கட்சியினர் முன்னிலையில் கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அப்பகுதியை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்களும், பொதுமக் களும் பள்ளிக்கு சென்று எதிர்ப்பு தெரிவித் தனர். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த காவல்துறை யினர் இரு பிரிவினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் திருவனந்தபுரத்தில் பள்ளியில் நடந்த நிகழ்வு குறித்து கேரள பொது கல்வித்துறை அமைச்சர் வி.சிவன் குட்டி கூறியதாவது:-
பள்ளியில் நடத்தப்பட்டதாக கூறப்படும் பூஜை குறித்து விசாரணை நடத்தப்படும். இதுதொடர்பாக விசா ரணை நடத்தி விரைவாக அறிக்கை அளிக்க பொது கல்வித் துறை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
கேரளாவில் தனியார் பள்ளியில் நள்ளிரவில் நடத்திய பூஜையா?
Leave a Comment