பி.ஜே.பி. தனிமைப்படுத்தப்பட்டது தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள்: உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஆதரித்து அனைத்துக் கட்சித் தலைவர்களும் வரவேற்பு!

viduthalai
12 Min Read

சென்னை,பிப்.16- ஒன்றிய பாஜக அரசின் தேர்தல் பத்திரம் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் நேற்று (15-2-2024) என்று தீர்ப்பளித்துள்ளதை வரவேற்று அனைத்துக் கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவித் துள்ளனர். அவ்விவரம் வருமாறு:
ஒன்றிய பாஜக அரசு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை நாடாளுமன்றத்தில் மாநிலங் களவையில் தங்களுக்கு பெரும்பான்மை இல்லாத நேரத்தில் பண மசோதாவாக கடந்த 2018 ஜனவரி 29 ஆம் தேதி கொண்டு வந்தது.
இந்த திட்டத்தின் கீழ் அரசியல் கட்சி களுக்கு நிதி அளிப்பவர்கள் பாரத ஸ்டேட் வங்கிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனி நபர்கள், நிறுவனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன் கொடையாக வழங்க முடியும். ஒரு நபர் அல்லது நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்களை வாங் கும் தனி நபர், நிறுவனங்கள் யார் என்ற விவரங்கள் பொதுமக்களுக்கோ அல்லது நன்கொடையை பெறும் அரசியல் கட்சிக்கு அளிக்கப்படாது. எனினும், அரசு மற்றும் வங்கி சார்பில் இந்த விவரங்களை சேகரித்துக் கொள்ளலாம். தேர்தல் பத்திரங்கள் திட்டத் தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இதனை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை தலைமை நீதிபதி சந் திரசூட் தலைமையிலான அய்ந்து
நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கில் நேற்று (15.2.2024) உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது எனக் கூறி அதனை ரத்து செய்து உத்தர விட்டுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிர்க்கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச் சருமான மு.க ஸ்டாலின் தீர்ப்பை வரவேற்று தனது சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப் பதாவது:
தேர்தல் பத்திரம் சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது சரியானதுதான். உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேர்தலில் நேர்மையை உறுதி செய்யும். அர சியல் கட்சிகளுக்கு ஜனநாயகம், சமநிலையை மீட்டெடுத்துள்ளது உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, தமிழ்நாடு

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
தேர்தல் பத்திரம் திட்டத்தை துவங்கிய போதே அது ஜனநாயகத்துக்கு விரோத மானது என காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. மோடி அரசின் தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்வோம் என்று 2019 இல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. கருப்புப் பணத்தை மாற்றும் மோடி அரசின் இத்திட் டத்தை சட்டவிரோதம் என்று கூறி, வழங்கிய தீர்ப்பை வரவேற்கிறோம்.

இந்தியா, தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
தேர்தல் பத்திரத் திட்டம் மூலம் 2018 முதல் 2022 வரை அரசியல் கட்சிகளுக்கு வழங்கிய மொத்த நன்கொடை ரூ.9,208 கோடி. இதில் பாஜக மட்டுமே ரூ.5,270 கோடியை நிதியாகப் பெற்றுள்ளது. இத் தகைய சமநிலையற்ற தன்மையின் காரண மாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி யுள்ளது. இதை மனதார வரவேற்கிறேன்.

இந்தியா, தமிழ்நாடு

கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,
தேர்தல் பத்திரத் திட்டத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்த கருத்துடன் அளித்திருக்கக்கூடிய தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. ஆரம்பத்திலிருந்து இத்திட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எதிர்த்து வந்ததுடன், உச்ச நீதிமன்றத்தில் சிபிஅய்(எம்) தொடுத்த வழக் கில் கிடைத்துள்ள மகத்தான தீர்ப்பு என பெருமை கொள்கிறோம்.
2017 இல் நிதிநிலை அறிக்கையில் அறி வித்து பின்னர் 2018 இல் அரசாணை மூலம் ஒன்றிய அரசு இத்திட்டத்தை வெளியிட்டது. இது தங்கு தடையின்றி நிறைவேற பல்வேறு சட்டங்களைத் திருத்தி பல கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிப்பதில் ரொக்க பரிவர்த்தனையை தவிர்ப்பது, வெளிப்படை தன்மையை ஊக் குவிக்கும், கருப்பு பண பரிமாற்றத்தை தடுக் கும் என விந்தையான காரணங்கள் முன் மொழியப்பட்டன. கடந்த 6 ஆண்டுகளில், தேர்தல் பத்திரம் மூலமான நிதியில் 80 சத விகிதத்திற்கும் மேல் பத்திரங்கள் பெற்றது பா.ஜ.க.
அரசியல் ஊழலை சட்டபூர்வமாக்கவே தேர்தல் பத்திரம் பயன்படும் என துவக்கத் திலேயே சிபிஅய் (எம்) உறுதிபடக் கூறிய தோடு, திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத் தில் வழக்கும் தொடுத்தது. தேர்தல் பத்திரத் தின் மூலமாக நன்கொடை பெற மாட்டோம் என்கிற கொள்கை முடிவை எடுத்த ஒரே அரசியல் கட்சி சிபிஅய் (எம்) தான், இது நீதி மன்ற வாதங்களின் போதும் குறிப்பிடப்பட்டது என்பதை பெருமிதத்தோடு இங்கு முன் வைக்கிறோம்.
உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில், தேர்தல் பத்திரம் நன்கொடை கொடுத்தவர்கள் பிரதி பலன் எதிர்பார்க்காமலா கொடுத்திருப்பார்கள் என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது. ஆளும் கட்சி என்ற அடிப்படையில் மட்டு மின்றி கார்ப்பரேட் கம்பெனியின் அடிவருடி என்ற முறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களை பெற்று குவித்தது பா.ஜ.க. கார்ப்பரேட்டுகள் இந்தப் பணத்தைக் கொண்டு தேர்தல் ஜனநாயகத்தை பண நாய கமாக மாற்றியதுடன் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றங்களை நிகழ்த்தியதுடன் நாடாளுமன்ற ஜனநாய கத்தை கேலிக்கூத்தாக்கியது பா.ஜ.க. ஆளும் கட்சிக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான கள்ளக்கூட்டணி குறித்து தொடர்ந்து சிபிஅய்(எம்) பேசி வருவதற்கு இத்தீர்ப்பு வலு சேர்த்துள்ளது.
கருப்பு பணத்தைத் தடுப்பதற்காகவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டது என்கிற ஒன்றிய அரசின் சொத்தை வாதங்களை நீதிமன்றத் தீர்ப்பு தவிடுபொடி ஆக்கியுள்ளது. அரசியல் கட்சிகள் நிதி பெறும் நடைமுறை யில் ஒளிவு மறைவு இருப்பதும், மக்களின் தகவல் பெறும் உரிமையை மறுதலிப்பதும் தவறானது என நீதிமன்றம் சாடியுள்ளது. தேர்தல் பத்திர வெளியீடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தேர்தல் பத்திரம் குறித்த அனைத்து விவரங்களையும் பாரத வங்கி தேர்தல் ஆணையத்திடம் அளித்திட வேண்டும், வாங்கிய பத்திரம் நிதி கொடுப் பவர் கையிலோ அல்லது அரசியல் கட்சியின் கையிலோ இருக்கும் பட்சத்தில் அவை திருப்பித் தரப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
தேர்தல் நேரத்தில் வந்துள்ள இத்தீர்ப்பு ஊழலுக்கு அப்பாற்பட்டவர்கள் என்ற போலியான பிம்பத்தை ஊதி பெரிதாக்கும் பா.ஜ.க.வின் கோட்டையில் விழுந்த பலத்த அடி. நீலச்சாயம் வெளுத்து நரியின் வேஷம் கலைந்து நிற்கிறது பா.ஜ.க.
-இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தமிழ்நாடு

இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தாவது,
ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜக ஒன் றிய அரசு 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய தேர்தல் பத்திரம் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. தகவல் பெறும் உரிமை சட்டத்துக்கு விரோதமானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர் தல் பத்திரம் தொடர்பான வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி உள்பட அய்ந்து நீதிபதிகள் அமர்வு ஒரு மனதாக வழங்கியுள்ள இத்தீர்ப்பு நாட்டின் ஜனநாயக வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக விளங்கும்.
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் கூட்டுக் களவாணியாக செயல்படும் பாஜக மக் கள் வாக்குரிமையை தேர்தல் சந்தையில் வாங் கும் பண்டமாக மாற்றி சிறுமைப்படுத்தி வந்ததை உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் தடுத்து நிறுத்தி யுள்ளது. இதன் மூலம் வாக்குகள் மூலம் ஆட்சி அமைக்கும் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டுள் ளது. நாடாளுமன்ற ஜனநாயகம் பாதுகாக்கப் பட்டுள்ளது.
2019 ஆண்டு முதல் தேர்தல் பத்திரங்கள் மூலம் யார், யார், எந்தெந்த கட்சிகள், எந்தெந்த நிறுவனங்களிடம் எவ்வளவு நன்கொடை பெற்றுள்ளன என்பதை பாரத ஸ்டேட் வங்கி தனது இணைய தளத்தில் ஏப்ரல் 13 ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தின் உத்தரவுபாஜகவின் சதிகார அரசியலை தோலுரித்து தோரணம் கட்டுவதாக அமைந்துள்ளது. மக்கள் கொண்டாடி மகிழ தக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
-இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் செல்வப்பெருந்தகை
உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பைவழங்கியுள்ளது. மக்களின் வரிப் பணம் எந்தெந்த தொழிற்சாலைகளின் கடன் தள்ளுபடி களுக்காக வழங்கப்பட்டுள் ளது என்கிற உண்மை வெளியே வரப் போகிறது. இந்த சிறப்புமிக்க தீர்ப்பை மனதார வரவேற் கிறோம்.

இந்தியா, தமிழ்நாடு

தொல்.திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
‘ தேர்தல் பத்திரத் திட்டம்’ அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வரவேற்கிறோம். உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி குறித்த காலத்தில் விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
தேர்தல் பத்திர திட்டத்தை ரத்து செய்தது மட்டுமின்றி நன்கொடை கொடுப்பவரின் விவரங்களை ரகசியமாக வைத்திருப்பதற்கென வருமானவரிச் சட்டம், ரிசர்வ் வங்கி சட்டம் முதலானவற்றில் பாஜக அரசு செய்த திருத்தங் களையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் எந்த அரசியல் கட்சிக்கு எந்த நிறுவனம் எவ்வளவு நன்கொடை வழங்கியது என்ற உண்மை இந்திய குடிமக்களுக்குத் தெரிய வரும்.
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரையிலான காலத்தில் 16,518 கோடி ரூபாய் தேர்தல் பத்திரங்கள் விற் பனையாகி உள்ளன எனவும், அதில் சுமார் 6600 கோடி ரூபாய் மதிப்புள்ள பத்திரங்கள் பாஜக வுக்கு வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரியவந்து உள்ளது.

இந்தியாவிலேயே மிக அதிகமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை தேர்தல் நன்கொடையாகப் பெற்றுள்ள பாஜக, அதை எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து பெற்றது என்பதும், அதற்காக அந்த கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு என்னென்ன சலுகைகள் கொடுக்கப்பட்டன என்பதும் விரைவில் தெரிய வரும்.
நன்கொடையாளர்கள் குறித்த ரகசியம் காப்பாற்றப்பட வேண்டுமென பாஜக அரசு இந்த வழக்கில் வாதாடியது. அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கில் பாஜக அரசுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி, அடுத்து நடக்கவிருக்கும் பொதுத் தேர்தலில் அது அடையப்போகும் தோல்விக்கு முன்னோட்டம் என்றே மக்கள் கருதுகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் தன்னை இணைத்துக்கொண்டிருந்தது. இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமெனக் கோரி யதற்கு மற்றவர்கள் குறிப்பிட்ட காரணங்களை ஆதரித்ததோடு, ‘விசிக போன்று விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்யும் சிறிய கட்சிகளுக்கு இந்தத் திட்டம் பாகுபாடு காட்டுகிறது. எனவே இதை ரத்து செய்யவேண்டும்’ என விசிக தரப்பில் வாதிடப்பட்டது. அதை உச்சநீதிமன்றம் அங்கீகரித்து கருத்து தெரிவித்திருந்தது.
இந்திய தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்று வதில் இந்தத் தீர்ப்பு பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது. அதற்காக உச்சநீதிமன்றத்தை மனமாரப் பாராட்டி நன்றி தெரிவிக்கிறோம். இந்தத் தீர்ப்பை வழங்கியதுபோலவே மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் குறித்த வழக்கையும் விரைவாக விசாரித்துத் தீர்ப்பளிக்க வேண்டு மென உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கி றோம்.
-இவ்வாறு தொல்.திருமாவளவன் குறிப் பிட்டுள்ளார்.

இந்தியா, தமிழ்நாடு

சட்டமன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கை வருமாறு,
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளித்திட 2018 இல் ஒன்றிய அரசு “தேர்தல் பத்திரங்கள்” என்ற பெயரில் ஒரு பித்தலாட்டத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத் தின் கீழ் அரசியல் கட்சிகளுக்கு நிதியளிப் பவர்கள் “எஸ்.பி.அய்.” வங்கிக்குச் சென்று ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கிக் கொள்ள முடியும். தனிநபர்கள் நிறு வனங்கள் என தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்க முடியும்.
ஒரு நபர் (அல்லது) நிறுவனம் சார்பில் எத்தனை பத்திரங்களை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற சட்டவிரோத சட்டத்தை இயற்றி, புனிதபடுத்தப்பட்ட பித்தலாட்டம்தான் இந்த “தேர்தல் பத்திரம்” திட்டம். தேர்தல் பத்திரங்களை வாங்கும் தனிநபர் நிறுவனங்கள் யார் என்று விவரங்கள் பொதுமக்களுக்கு நன்கொடையாகப் பெரும் அரசியல் கட்சிகளுக்கோ அளிக்கப்படாது.
இதன் அடிப்படையில், பா.ஜ.க., சட்டப்பூர் வமான லஞ்சம் பெறும் திட்டமான தேர்தல் பத்திரம் திட்டத்தினைப் பயன்படுத்தி, 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த நிதியாண்டு வரை, சுமார் 6,564 கோடி ரூபாய் பணத்தை சட்டப்பூர்வமாகச் சுருட்டி உள்ளது. இது ஓர் அப்பட்டமான, சட்டப்பூர்வ ஊழல் ஆகும்.

இந்த நிலையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை எனக் கூறி அதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
அரசைக் கணக்கு கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. வெளிப்படையாகத் தெரிவிக்காத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும், மேலும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப் பிரிவு 19 உட்பிரிவு (1) ஆகியவற்றை மீறும் வகையில் இந்த திட்டம் உள்ளதாகவும், கருப்புப் பணத்தைத் தடுக்கத் தேர்தல் பத்திரங்கள் அனுமதிக்கிறோம் என்ற பாஜக அரசு சொல்லும் பொய்கள் ஏற்கத்தக்கது அல்ல எனவும் நீதிபதி கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தீர்ப்பு நீதிமன்றங் கள் மீது இருக்கும் நம்பிக்கையை மீண்டும் அதிகப்படுத்தி இருக்கிறது.

தேர்தல் பத்திரங்கள் லஞ்சத்துக்கு வழி வகுக்கும் எனவும், அரசியல் கட்சிகளுக்கு யார் பணம் தருகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு எனவும் தெரிவித்த நீதிபதிகள், “தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்டவிரோதமானது” எனக் கூறி அதனை ரத்து செய்ய உத்தரவிட்டிருப்பது, மிக்க மன மகிழ்வைத் தந்துள்ளது.
ஜனநாயகத்தின் அடித்தளமான தேர்தலில் பங்கு கொள்ளும் கட்சிகளுக்கு வரும் நிதி ஒளிவு மறைவில்லாமல் வெளிப்படையாக அமைவ தற்கு இந்தத் தீர்ப்பு வழி வகுத்துள்ளது. ஜன நாயகத்தை இத்தீர்ப்பு தலைநிமிர வைத்துள்ளது. ஊழலுக்கு எதிராக போராடுவதாகச் சொல்லிக் கொள்ளும் பா.ஜ.க.வின் பெரிய மிகப் பெரிய ஊழல் இது.
அதிகாரம் அவர்கள் கைகளில் இருக்கும் வரை, இத்தகைய பித்தலாட்டச் செயல்களை அரங்கேற்றத் துளியும் தயங்காத பாசிச சக்திக ளின் முகத்திரையை இந்திய நீதித்துறை கிழித் தெறிந்து இருக்கிறது. வெளிப்படைத் தன்மையில்லாத பிஎம் கேர் நிதிக்கும் இதேபோல் ஒரு தீர்ப்பு வர வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பு!”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா, தமிழ்நாடு

மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி
கொள்கை அளவில், தேர்தல் பத்திரங்களை ஏற்காத ஒரே கட்சி சிபிஅய்(எம்) மட்டுமே. ஊழலுக்கு எதிரான இந்த அரசாங்கத்தின் கூற்றுகளை இது அம்பலப்படுத்தியுள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்
தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததை வரவேற்கிறேன். இந்தத் தீர்ப்பு வெளிப்படைத்தன்மைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது சமூக வலைத்தள பதிவில், மோடி அரசால் பிரம்மாண்டமாக விளம்பரப்படுத்தப்பட்ட தேர்தல் பத்திரத் திட்டம், நாடாளுமன்றச் சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் இன்று (15.2.2024) தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலமாக எதிர் பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கி றோம். பணத்தை விட வாக்குகள் தான் முக்கியம் என்பதை இது உறுதிப்படுத்தும். நமது விவசாயிகளுக்கு அநீதிக்கு மேல் அநீதி இழைக்கும் மோடி அரசு, நன்கொடையாளர்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகள் மற்றும் விலக்குகளை அளித்து வருகிறது. வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) தொடர் பாக அரசியல் கட்சிகளை சந்திக்கக் கூட தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருவதையும் உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். வாக்களிக்கும் முறையின் அனைத்து விஷயங்களும் தெளிவா கவும், வெளிப்படையாகவும் இருக்கும் பட்சத் தில் தேர்தல் ஆணையம் ஏன் பிடிவாதமாக இருக்க வேண்டும்? என்று குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனா ஆனந்த் துபே
இது மிகப் பெரிய தீர்ப்பு. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் மற்றும் அரசு எங்கிருந்து நிதி பெறுகின்றன என்பதை தெரிவிக்க வேண்டும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *