விவசாயிகளின் குரலை ஒன்றிய அரசு ஒடுக்க நினைக்கிறது மல்லிகார்ஜுன கார்கே

viduthalai
1 Min Read

புதுடில்லி, பிப்.15 பஞ்சாபில் இருந்து விவசாயிகள் ‘டெல்லி சலோ’ அணிவகுப்பை தற் போது தொடங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலம் பதேகர் சாஹிப் பகுதியில் இருந்து டிராக்டர் பேரணி தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் விவசாயிகளின் குரலை மோடி அரசு ஒடுக்க முயல்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,
முள்வேலி, டிரோன்களில் இருந்து கண்ணீர் புகை, ஆணிகள் மற்றும் துப்பாக்கிகள்… எல்லாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர் வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரலை ஒடுக்க முயல்கிறது.
விவசாயிகளை ‘ஒட்டுண்ணி’ என்று அழைத்து அவதூறு செய்ததையும், 750 விவசாயிகள் உயிரிழந்ததையும் நினைவில் கொள்க.
10 ஆண்டுகளில், விவசாயிகளுக்கு அளித்த மூன்று வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்ற வில்லை.
2022க்குள் விவசாயிகளின் வருவாயை இரட் டிப்பாக்குதல், சுவாமிநாதன் அறிக்கையின்படி 50 சதவிகிதம் சேர்த்து இடுபொருள் செலவுகளைச் செயல்படுத்துதல் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டத் தகுதி வழங்குதல் ஆகியவை ஆகும்.
இப்போது 62 கோடி விவசாயிகளின் குரல் எழுப்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விவசாயிகளுக்கு நீதிக்கான குரலை காங்கிரஸ் எழுப்பும் . நாங்கள் பயப்பட மாட்டோம், தலை வணங்க மாட்டோம்,என தெரிவித்துள்ளார்.

 

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *