“ஏழை, நடுத்தர மக்களை வரி ஏய்ப்பின் மூலம் பழிவாங்கும் மோடி அரசு” காங்கிரஸ் சாடல்

viduthalai
2 Min Read

புதுடில்லி,பிப்.15- ஒன்றிய அரசின் வரிவிதிப்பில், தனி யார் நிறுவனங்களுக்கு விதிக் கப்பட்டிருக்கும் வரி விகிதத்தை விட வருமான வரி செலுத்தும் மக்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டுள் ளது. இவ் வளவு வித்தியாசம் உருவாகி இருப்பது இதுவே முதல் முறை. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள் ளனர்.
ஒன்றிய அரசு தற்போது விதித்திருக்கும் வரி வரையறை, சமூக நீதிக்கு புறம்பாக உள் ளது என ஆதாரங்களோடு, சமூக வலை தளப் பதிவில் விமர்சித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.
“கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தனி மனித வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்திருக் கிறது. தனியார் நிறுவனங் களின் வரி ரூ.9 லட்சம் கோடியாக குறைந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக் கின்றனர்!”
“தனியார் நிறுவனங்கள் மீதான வரி விகிதமானது, கடந்த 19 ஆண்டுகளில் இல் லாத அளவிற்கு குறைந்துள்ள போதும், தனிமனித வருமான வரி கணிசமாக அதிகரித் துள்ளது.”

“இந்தக் காரணங்களால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக் கின்றன. நிறுவனங்களின் இந்த நிலை யில் – அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் பொரு ளாதார நிலையும் கவலைக் குரியதாக மாறி இருக்கிறது. இதனால் பலர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு வட்டிகட்டி வாழும் அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஆனால், இதன் மூலம் லாபம் அடைந்த பெரும் முதலாளிகளான அதானி மற்றும் அம்பானி போன் றோர் கடும் வளர்ச்சி கண்டுள் ளனர். ஆசியாவிலேயே பெரும் பணக்காரராக அம் பானி வளர்ச்சி யடைந்துள் ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக் கும் இந்தியர்கள் அனைவரும் பா.ஜ.க அரசுக்கு மிக நெருக்க மானவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறான வரி ஏய்ப்பின் முலம் நடுத்தர மக்களின் வாழ் வாதரத்தை உறிஞ்சி பெரும் பணக்காரர்களுக்கு தாரை வார்த்திருக் கிறது பா.ஜ.க. – இவர்களின் இந்த கார்ப்பரேட் ஆதரவு கொள்கை யால் மக்கள் காவு கொடுக்கப்பட் டிருக்கிறார்கள். என்று கடு மையாக விமர்சித்திருக்கிறார்” ஜெய்ராம் ரமேஷ் மக்களை நேரடியாக பாதிக்கும் வரி விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் போதும் இடைக் கால நிதி நிலை அறிக்கையில் மக்களின் சுமைகளை குறைக்க எவ்வித நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்களை கடுமையான சுமைக்கு தள்ளியிருக்கும் அரசின் இந்த முடிவுக்கு இந் திய அளவில் கடும் கண்ட னங்கள் எழுந்து வருகிறது.

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *