தென்சென்னையில் கழகக் குடும்ப விழா

0 Min Read

பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு 93ஆவது பிறந்தநாள்-கழகப்பொறுப்பாளர்கள் வாழ்த்து.
தென் சென்னை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சைதை எம்.பி.பாலு அவர்கள் 14.02.2024 மாலை 7.00 மணி அளவில் சைதாப் பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் 93ஆவது பிறந்த நாளை ‘கேக்’ வெட்டி குதூகலமாக கொண்டாடினார். உறவினர்களும் தோழர்களும் வந்திருந்து வாழ்த்தி சிறப் பித்தனர். தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர. பார்த்த சாரதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் மு.ந.மதியழகன் ஆகியோர் பயனாடை அணிவித்து மகிழ்ந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *