ஜாப்னா, பிப்.15- “ஜாப்னா சட்ட மாநாடு (JLC) 2024”, 27.1.2024 மற் றும் 28.1.2024 தேதிகளில் யாழ்ப் பாண பல்கலைக்கழக வளாக ஹுவர் அரங்கத்தில் நடைபெற் றது. இந்நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்டப்பிரிவு மற் றும் சுரானா மற்றும் சுரானா இண்டர்நேஷனல் அட்டர்னீஸ் (சுரானா மற்றும் சுரானா) சென்னை நிறுவனமும் சேர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று.
இந்நிறுவனம் இந்தியாவிலேயே மேலான சில நிறுவனங்களில் ஒன்று. மேலும், இந்நிறுவனம் இலங்கை வாழ் தமிழ் மக்களுக்காக 40 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப் பிரதிநிதியாக செயல்பட்டு வந்துள் ளது. சுரானா மற்றும் சுரானா நிறுவனத்தின் ஆதரவோடு ஒவ் வொரு ஆண்டும் இந்த சட்ட மாநாடு நடத்தப்படும்.
இரண்டு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 300க்கும் மேற் பட்டவர்கள் கலந்து கொண்டனர். முதன்மை விருந்தினராக இலங்கை அட்டர்னி ஜெனரல் சஞ்சை ராஜ ரத்தினம், நீதிபதி எசந்தா கொட் கோடா, இலங்கை உச்சநீதிமன்ற நீதிபதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
டாக்டர் ராதிகா குமாரசுவாமி, மேனாள் அய்.நா.மன்ற துணை பொதுச் செயலாளர், டாக்டர் ஜெயம்பதி விக்ரமாத்னே ஆகி யோர் கவுரவ விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
விழாவின் முக்கிய பேச்சாளர் களாக டாக்டர் கே.கனக் – ஈஸ்வரன், மெரிட்டஸ் பேராசிரியர் எம்.சொர் ணராஜா (சிங்கப்பூர் தேசிய பல் கலைக் கழகம்), பேராசிரியர் ரோஹித் டே (யேல் பல்கலைக் கழகம்), மற்றும் டாக்டர். வினோத் சுரானா, நிரு வாகக் கூட்டாளி மற்றும் முதன்மை அதிகாரி, சுரானா மற்றும் சுரானா இண்டர் நேஷனல் அட்டர்னீஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து பங்கேற்றவர்கள் 23 சுருக்கமான விளக்கங்களை சமர்ப்பித்தனர்.
இவை உரிமைகள், சட்ட நிறு வனங்கள், வணிக விவரங்கள் மற்றும் பன்னாட்டு அம்சங்கள் என்ற 4 தலைப்புகளில் இடம் பெற் றன. இந்நிகழ்வுகளை வி.டி.தமிழ் மாறன், பேராசிரியர் சம்பத் புன்சி ஹேவா (தலைவர், சட்டவியல் கொழும்பு பல்கலைக்கழகம்), டாக்டர். கலானா செனரத்னே (தலைவர், சட்டத்துறை, பேரா தனைப் பல்கலைக்கழகம்), மற்றும் எம்.ஏ.எம்.ஹசீம் (மூத்த விரிவுரை யாளர், சட்டப் பிரிவு, கொழும்பு பல்கலைக்கழகம்), தலைமையேற்று சிறப்பித்தனர்.