தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு – வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் தேர்தல் நிதி சேர்ப்பு முறை தெள்ளத் தெளிவாக்கப்பட்டதன்மூலம், மோடி அரசின் தேர்தல் வெற்றி, வித்தைகளின் ரகசியம் வெளிச்சத்திற்கு வரும் நிலையை இது நிச்சயம் ஏற்படுத்தும்.
ஜனநாயகப் பாதுகாப்பு, தேர்தல் முறையின் தூய்மைக்கு இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான தீர்ப்பாகும்!
(A Landmark Judgement)
இந்தத் தீர்ப்பு பத்திரமான தேர்தலுக்கு வழிகாட்டும்!
கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
15-2-2024