தேர்தல் பத்திரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பும்- கழகத் தலைவரின் வரவேற்பும்!

1 Min Read

தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு – வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பால், பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியின் தேர்தல் நிதி சேர்ப்பு முறை தெள்ளத் தெளிவாக்கப்பட்டதன்மூலம், மோடி அரசின் தேர்தல் வெற்றி, வித்தைகளின் ரகசியம் வெளிச்சத்திற்கு வரும் நிலையை இது நிச்சயம் ஏற்படுத்தும்.
ஜனநாயகப் பாதுகாப்பு, தேர்தல் முறையின் தூய்மைக்கு இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒரு சிறப்பான தீர்ப்பாகும்!
(A Landmark Judgement)
இந்தத் தீர்ப்பு பத்திரமான தேர்தலுக்கு வழிகாட்டும்!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
15-2-2024

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *