சென்னை, அக். 7- தமிழ்நாட்டின் மருத்துவ கட்டமைப்புகளை குஜ ராத் மாநில மருத்துவ குழுவினர் பாராட்டியுள்ளனர் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்து வக் கட்டமைப்பை பார்வையிட வந்துள்ள குஜராத் மாநில மருத்து வக் குழுவினருடனான கலந்துரை யாடல் கூட்டம் கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்து வமனையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் தலைமையில் நேற்று (6.10.2023) நடந்தது.
அப்போது, செய்தியாளர்களி டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:
தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளைப் பார்வையிட குஜராத் மாநில மருத்துவத்துறை மருத்துவர்கள் 60 பேர் கடந்த 3-ஆம் தேதி சென்னை வந்தனர். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்து வமனை, ஓமந்தூரார் அரசு பன் னோக்கு உயர்சிறப்பு மருத்துவ மனை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை, நந்திவரம் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகா தார நிலையம், பூந்தமல்லி ஆரம்ப சுகாதார நிலையம், தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்து வமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளுக்கு நேரடி யாக சென்று நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளைப் பார்வையிட்டனர்.
சிகிச்சைகள் குறித்து மருத்துவர் களிடம் கேட்டறிந்தனர். தமிழ் நாட்டின் சிறந்த மருத்துவ கட்ட மைப்புகளையும், மகப்பேறு மருத் துவம், இதய அறுவைசிகிச்சைகள், புற்றுநோய் சிகிச்சைகள் சிறப்பாக செய்யப்படுவதையும் பாராட்டி யுள்ளனர்.
மறைந்த மேனாள் முதலமைச் சர் முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டை முன்னிட்டு, வரும் 18ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில் காப்பீட்டு திட்ட அட்டைகளை வழங்கும் முகாம் கள் நடத்தப்படும். தமிழ்நாட்டில் நடப்பாண்டில் 4,745 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ள னர். 4 பேர் மரணம் அடைந்துள் ளனர். தேசிய மருத்துவ ஆணையம் தென் மாநிலங்களில் மேற் கொண்டு மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப் படாது என்று அறிவித்துள்ளது.
ஆனால், தமிழ்நாட்டில் இன் னும் பெரம்பலூர், மயிலாடுதுறை, தென் காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மருத்து வக் கல்லூரிகள் இல்லை.
இந்த மாவட்டங்களில் மருத் துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. இதை முதலமைச்சர்ரும் வலியுறுத்தியுள் ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.