‘முஸ்லிம் வீடுகளை இடித்து காவல்நிலையம் கட்டப்படுமாம்’

1 Min Read

நைனிடால்,பிப்.14– பா.ஜ.க. ஆளும் உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானிக்கு அருகே உள்ளது பன்பூல்புரா. அப்பகுதியில் முஸ் லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 2 கிமீ சுற்றளவுள்ள பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதி மன்றம் மூலம் உத்தரவை பெற்று, முஸ்லிம் மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்ற ஆளும் பாஜக அரசு துடித்து வருகிறது.
இதுதொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வரும் நிலை யில், கடந்த வாரம் (பிப்.9) பன்பூல் புராவில் உள்ள மதரஸா மற்றும் மசூதியை இடித்து வன்முறையை கிளப் பியது பாஜக அரசு.
இந்த வன்முறையில் 6 பேர் உயி ரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட் டோர் படுகாயமடைந்தனர். தற்போது ஹல்த்வானியில் இணைய சேவையும் தடை செய்யப்பட்டு, ஊரடங்கு உத்தர வும், கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட் டுள்ளது.
இந்நிலையில், 12.2.2024 அன்று பன் பூல்புராவில் உள்ள ரயில்வே ஆக்கிரமிப்பு நிலத்தில் பிரமாண்ட காவல்நிலையம் கட்டப்படும் என மாநில பாஜக முதல மைச்சர் புஷ்கர் சிங் தாமி வன்முறையை தூண்டும் வகையில் சர்ச்சைக்குறிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச் சர் புஷ்கர் சிங் தாமியின் அறிவிப்பால் ஹல்த்வானியில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *