பாட்னா,பிப்.14- பீகார் மாநிலசட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப் புக்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், மேனாள் துணை முதல மைச்சருமான தேஜஸ்வி பேசுகையில், “நிதிஷ் குமாரை எங்கள் குடும்ப உறுப்பினராக நினைக் கிறோம்.
அதாவது உங்களை (நிதிஷ் குமார்) ஒரு தந்தை என்ற முறையில் தசரதனாக நான் பார்க் கிறேன். தசரதன் தனது மகன் ராமனை காட்டுக்கு அனுப்பினார்.
தற்பொழுது நிதிஷ் குமார் தசரதனாக ஆவ தற்கான நெருக்கடி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பீகார் மக்க ளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் என்னை மட்டும் நிதிஷ்குமார் காட்டுக்கு அனுப்பி விட் டார்.
மோடி உத்தரவாதம் அளிப்பாரா?
நிதிஷ் குமார் அவர் களே, முன்பு பாஜகவை விமர்சித்தீர்கள், இப் போது பாஜகவை பாராட் டுகிறீர்கள். நீங்கள் பதவி விலகுவதற்கு காரணம் என்ன என்பதை மக்கள் அறிய விரும்புகின்றனர். பதில் சொல்ல தயாரா?
தனது ஆட்சிக் காலத்தில் 9 முறை பதவி யேற்ற ஒரே முதல மைச்சர் நிதிஷ் குமார் தான். இனி ஒருபோதும் நிதிஷ் குமாரை பீகார் மக்கள் நம்பமாட்டார் கள்.
அய்க்கிய ஜனதாதள சட்டமன்ற உறுப்பினர் கள், மக்கள் மத்தியில் என்ன பதில் சொல்லப் போகிறார்களோ என்பதை நினைத்துதான் எனக்கு பரிதாபமாக இருக்கிறது.
நிதிஷ்குமார் மீண்டும் அணி மாற மாட்டார் என்று மோடியால் உத்தர வாதம் அளிக்க முடியுமா” என கேள்வி எழுப்பினார்.
தேஜஸ்வி பேசும் பொழுது நிதிஷ் குமார் கண்கலங்கிய நிலையில் எதுவும் பேச முடியாம லும், எதிர்க்கட்சி வரி சையை பார்க்காமலும் சட்டமன்றத் தலைவரை மட்டுமே பார்த்து பரிதா பமாக அமர்ந்திருந்தார்.