கழக மேனாள் செயலவைத் தலைவர் சுஅறிவுக்கரசு நினைவு கருத்தரங்கம்

0 Min Read

பகுத்தறிவாளர் கழக மேனாள் மாநில தலைவர், திராவிடர் கழக மேனாள் செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு அவர்களின் நினைவுக் கருத்தரங்கம் 10.2.2024 மாலை சென்னை பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோவி.கோபால் வரவேற்புரை ஆற்ற, மாநில துணைத் தலைவர் வேண்மாள் நன்னன் தலைமையுரை ஆற்றினார். திராவிடர் கழக பொருளாளர் வீ.குமரேசன் தொடக்க உரையை ஆற்றினார். சிறப்புப் பேச்சாளராக அறிவியல் ஆர்வலர் டாக்டர் கணேஷ் வேலுச்சாமி “சார்லஸ் டார்வின் வாழ்க்கை குறிப்பை” சிறப்பாக விளக்கிக் கூறினார். இறுதியாக ப.க. மாநில பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன் நன்றியுரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *