கேரள மாநில அரசு நியாய விலைக் கடைகளில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க மறுப்பு

1 Min Read

திருவனந்தபுரம், பிப்.13 கேரளா சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், ‘‘கேரளாவில் உள்ள 14,000 நியாய விலைக் கடைகளில் பிரதமரின் ஒளிப்படம் அடங்கிய பதாகை கள் வைக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 550 நியாய விலைக் கடைகளில், பிரதமரின் செல்பி பாயிண்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது” என்றார்.

முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்!

அய்.யு.எம்.எல்., சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ஹமீது இது குறித்து எழுப் பிய கேள்விக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்தார்.
அவர் தனது பதிலில்,

‘‘நியாய விலைக் கடைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட இலச்சினை உடன், பிரதமரின் ஒளிப்படத்தை வைப்ப தற்கும், செல்பி பாயிண்ட் உருவாக்குவதற் குமான ஒன்றிய அரசின் உத்தரவை ஏற் கப் போவதில்லை. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரச்சாரத் தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *