திருவனந்தபுரம், பிப்.13 கேரளா சட்ட மன்றக் கூட்டத் தொடரில் பேசிய உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சுரேஷ், ‘‘கேரளாவில் உள்ள 14,000 நியாய விலைக் கடைகளில் பிரதமரின் ஒளிப்படம் அடங்கிய பதாகை கள் வைக்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் 550 நியாய விலைக் கடைகளில், பிரதமரின் செல்பி பாயிண்ட்களை நிறுவவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது” என்றார்.
முதலமைச்சர் பினராயி விஜயன் பதில்!
அய்.யு.எம்.எல்., சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ஹமீது இது குறித்து எழுப் பிய கேள்விக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் பதிலளித்தார்.
அவர் தனது பதிலில்,
‘‘நியாய விலைக் கடைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்ட இலச்சினை உடன், பிரதமரின் ஒளிப்படத்தை வைப்ப தற்கும், செல்பி பாயிண்ட் உருவாக்குவதற் குமான ஒன்றிய அரசின் உத்தரவை ஏற் கப் போவதில்லை. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இது பிரச்சாரத் தில் ஒரு யுக்தியாகவே கருதப்படுகிறது. இது சரியல்ல என ஒன்றிய அரசுக்குத் தெரிவிக்கப்படும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தை அணுகுவது குறித்தும் ஆலோசிக்கப்படும்” என்று கூறியுள்ளார்.