கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

1 Min Read

12.2.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பாஜக ஆர்.எஸ்.எஸ். வெறுப்பை விதைக்கிறது என ராகுல் கண்டனம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்து வோம், ராகுல் உறுதி. அக்னிவீர் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்ட பிறகு பணியமர்த்த மறுக்கப்பட்ட 1.5 லட்சம் விண்ணப்பதாரர்களை வேலைக்கு அமர்த்துவதாகவும், இழப்பீடு வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரையை ‘உரிமை களை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற பெயரில் அறிவித்தது திமுக. பிப்ரவரி 16, 17, 18 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு நாடாளுமன்றத் தொகுதிகள் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறும்.
தி இந்து:
* 17ஆவது மக்களவையில் சராசரி ஆண்டின் அமர்வு நாட்கள் 135இல் இருந்து 55 ஆக குறைந்துள்ளது.
தி டெலிகிராப்:
* அசாமில் சி.ஏ.ஏ. அமல்படுத்தப்படுவதற்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்திற்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. அகில் கோகோய் அழைப்பு விடுத்துள்ளார்.
* அந்தர் பல்டி: தான் தேர்தல் பிரச்சாரத்திற்கு வரவில்லை என்று பேசிய ஒரு நிமிடம் கழித்து நாங்கள் 370 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப் போம் என மத்தியப் பிரதேசத்தின் பழங்குடியினரான ஜாபுவாவில் நடந்த பேரணியில் பிரதமர் மோடி பேச்சு.
– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *