தமிழர் தலைவர் காணொலியில் உரை
தருமபுரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அரிய உரை
தருமபுரி, பிப்.12- தருமபுரி கழக மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தருமபுரி பெரியார் திருமண மண்டபத்தில் 11-2-2024 அன்று காலை 10 மணிமுதல் மாலை 5.30 மணிவரை நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கு. சரவணன் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட செயலாளர் பெ.கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். தலைமை கழக அமைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, காப்பாளர் விடுதலை தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் கதிர், பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச்செயலாளர் அண்ணா.சரவணன், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மா.செல்ல துரை, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் கதிர்.செந்தில்குமார், நகரத் தலைவர் கரு.பாலன், பகுத்தறி வாளர் கழக மாநில அமைப்பாளர் நா.அண்ணாதுரை, விடுதலை வாசகர் வட்டத் தலைவர் சின்னராசு, மாவட்டத் துணைத் தலைவர் இளைய.மாதன், பகுத்தறி வாளர் கழக பொறுப்பாளர் அன்பரசு, மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் கே.ஆர்.குமார், சிவாஜி, பீம.தமிழ்பிரகாரன், ஆசிரியர் சந்தப்பட்டி சிவாஜி ஆகி யோர் முன்னிலை ஏற்றனர்.
திராவிடர் கழகம் மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியார் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக் குமார் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தினார்.
வகுப்புகளும் – தலைப்புகளும்!
பார்ப்பன பண்பாட்டு படையெடுப்புகள் என்ற தலைப்பில் திராவிடர் கழக துணைத் தலைவர் கவிஞர்.கலி. பூங்குன்றன் வகுப்பெடுத்தார்.
அழகிரிசாமி, ‘‘தந்தை பெரியார் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பிலும், முனைவர் அதிரடி. அன்பழகன் ‘‘சமூகநீதி வரலாறு” என்ற தலைப்பிலும், கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ‘‘தந்தை பெரியாரின் பெண்ணுரிமை சிந்தனைகள்” என்ற தலைப் பிலும், எழுத்தாளர் வி.சி.வில்வம் ‘‘தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சாதனைகள்”, என்ற தலைப்பிலும், ஈட்டி கணேசன் ‘‘மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம்” என்ற தலைப்பிலும் வகுப்பெடுத்தனர்.
தமிழர் தலைவர் காணொலியில் உரை
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்களிடையே திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் காணொலியில் உரையாற்றினார்கள்.
கல்லூரி பள்ளி மாணவர்கள் 64 பேரும், கழகத் தோழர்களும் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்று சிறப் பித்துள்ளனர்.
33 ஆண்கள் 31 பெண்கள் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றனர்.
பள்ளி மாணவர்கள் 13 பட்டதாரிகள் 51
பயிற்சியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
சிறப்பாக குறிப்பு எடுத்த தருமபுரி பெ.கோகிலா, பள்ளிப்பட்டி மா.பழனிச்சாமி, தர்மபுரி ஆ.அஜிதா, கே.வேட்ரப்பட்டி தே.தேன்மொழி, தருமபுரி மோ.திவ்ய சிறீ, தருமபுரி மு.அர்ச்சனா, எஸ்.தாதம்பட்டி அ.குரு, ஏலகிரி செவு.சரண்யா, மல்லிக் குட்டை ம.பெருமாள் ஆகிய 9 மாணவர்கள் தேர்ந்தெடுத்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் தாங்கள் பெற்ற பயன்கள் குறித்து இரண்டு மாணவர்கள் தங்களுடைய கருத்துகளை கூறி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.
பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற அனைத்து மாண வர்களுக்கும் கழக மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி கழகப் புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கினார்.
ரூ 7,110 புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டன.
பங்கேற்று சிறப்பித்தவர்கள்
பகுத்தறிவாளர் கழக மாநில துணைப் பொதுச் செயலாளர் அண்ணா.சரவணன், பகுத்தறிவாளர் கழக மாநில கலைத்துறை செயலாளர் மாரி.கருணாநிதி, அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் சா. ராஜேந்திரன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் அறிவரசன், கிருஷ்ண கிரி மாவட்ட செயலாளர் மாணிக்கம், பெங்களூர் ராஜா, அரூர் மாவட்ட இளைஞரணி தலைவர் த.யாழ்திலீபன், தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர் முனியப்பன், தருமபுரி மாவட்ட மாணவரணி தலைவர் வீரமணி, மாவட்ட மகளிரணி தலைவர் கோகிலா, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் சங்கீதா, பொதுக்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வி பூங்குன்றன், நளினிகதிர், பெரியார் திடல் க. கலைமணி, கிருஷ்ணகிரி மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், கிருஷ்ணகிரி மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் ஆசிரியர் கிருஷ்ணன், ஆசிரியர் அன்பரசன், தொழிலாளரணி மாவட்ட தலைவர் காமலாபுரம் சிசுபாலன், தலைமை ஆசிரியர் சிவசங்கர், அரூர் பலவேந்திரன், பெரியார் பெருந்தொண்டர் கிருஷ்ணன், பெரியார் பெருந்தொண்டார்கள் வகுத் தப்பட்டி கிருஷ்ணன் பாப்பாரப்பட்டி சுந்தரம், காமலா புரம் ராஜா, தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் மாணிக்கம்உள்ளிட்ட கழகத் தோழர்கள் பொறுப்பாளர் கள் பங்கேற்ற சிறப்பித்தனர்.
நிறைவாக பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் ஆசி ரியர் கிருஷ்ணமூர்த்தி நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும், பங்களித்தவர்களுக்கும் நன்றி கூறினார்.