நாடாளுமன்றத்தில் பிஜேபியின் நிதிநிலை அறிக்கை: ‘பொய்கள்’ அடங்கிய வெள்ளை அறிக்கை – காங்கிரஸ் கடும் தாக்கு!

viduthalai
1 Min Read

புதுடில்லி,பிப்.11- நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை ஒப்பீடு வெள்ளை அறிக்கை மோடி அரசின் “பொய்கள் அடங்கிய வெள்ளை அறிக்கை” என காங்கிரஸ் கடுமையாக தாக்கி உள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்ற வளா கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய் ராம் ரமேஷ், “நிதியமைச்சர் தாக்கல் செய்தது உண்மையான வெள்ளை அறிக்கை இல்லை. மோடி அரசின் “பொய்கள் அடங்கிய பொய் வெள்ளை அறிக்கை.” இந்த வெள்ளை அறிக்கைக்கு பதில் காங்கிரஸ் கட்சித் தலைவர் கார்கே வெளியிட்ட கருப்பு அறிக்கை யில் உள்ளது.
கார்கேவின் கருப்பு அறிக்கை நிதிய மைச்சர் சீதாராமன் அறிக்கைமீதான சர்ஜிக்கல் ஸ்டிரைக். பணமதிப்பிழப்பு, அதிகரிக்கும் வேலையில்லாத் திண் டாட்டம், பணவீக்கம், பொருளாதார ஏற்றத்தாழ்வு குறித்து வெள்ளை அறிக் கையில் எதுவுமில்லை. சீனாவுடனான பிரச்சினை, எல்லை பதற்றங்கள் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட காங்கிரஸ் கோருகிறது.
இதேபோல் மணிப்பூர் விவகாரம், முன்பு நடந்த பணமதிப்பிழப்பு குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய கோரினோம். 45 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்ந்துள்ள வேலையில்லா திண்டாட்டம் பற்றி வெள்ளை அறிக்கை கேட்டோம். ஆனால் அதை செய்யாமல் மோடி மவுனம் காக்கிறார். வெள்ளை அறிக்கை என்பது ஒரு நிகழ்வு. ஏற்கெனவே எல்.கே.அத்வானி சொன்னது போல் மோடி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் மட்டுமே.
விவசாயிகள், பெண்கள், இளைஞர் களுக்கு எதிரான அநீதிகள், ஊழல் விவகாரங்களில் பாஜக அரசு மவுனமாக உள்ளது. பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் ஒன்று அல்லது இரண்டு நண்பர்களுக்கு விற்கப்படுகிறது. அனைத் துமே தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டு வருகின்றன” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *