பிளஸ் டூ மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு: நாளை தொடக்கம்

2 Min Read

சென்னை, பிப்.11-பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு நாளை 12.2.2024 தொடங்கி 17.2.2024ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 10, 11, 12ஆ-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8ஆ-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.
இதற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது மேற்கொள் ளப்பட்டு வருகின்றன. இந் நிலையில் பொதுத்தேர்வு எழு தவுள்ள 12ஆ-ம் வகுப்பு மாண வர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நாளை 12.2.2024 அன்று தொடங்கி பிப்.17 வரை நடைபெற உள்ளன.

மாநிலம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள் ளிகளில் பயிலும் சுமார் 6 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
இதற்காக அனைத்து பள் ளிகளிலும் செய்முறை தேர் வுக்கு தேவையான ஆய்வகப் பொருட்கள் இருப்பு வைக் கப்பட்டுள்ளன. அதன்படி தேர் வுத்துறை வழங்கியுள்ள வழி முறைகளை பின்பற்றி பாடவாரி யாக அட்டவணை தயாரித்து எவ்வித குளறுபடியுமின்றி பிப்ர வரி 17ஆ-ம் தேதிக்குள் செய் முறைத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும். ஒரு சுற் றுக்கு அதிக பட்சம் 25 முதல் 30 மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

தலைமை ஆசிரியர் பொறுப்பு

மேலும், தேர்வுத்துறை சலுகை அறிவித்த மாணவர் களுக்கு மட்டும் செய்முறைத் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தேர்வில் ஏதேனும் புகார் கிடைக்கப் பெற்றால் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும்.

எனவே, கூடுதல் கவனத் துடன் செயல்பட வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுறுத் தல்களை தேர்வுத் துறை வழங்கியுள்ளது. இதற்கிடையே பொதுத் தேர்வில் முறைகேடுகள் நடைபெறுவதை தவிர்ப்பதற் காக பல்வேறு செயல்பாடுகளை தேர்வுத் துறை மேற்கொண்டு வருகிறது.
அந்தவகையில் மாணவர் கள் தேர்வில் காப்பி அடிப்பதை தடுக்கும் வகையில் 2 விதமான வினாத்தாள் வழங்கப்பட உள் ளன. இந்த வழக்கம் ஏற் கெனவே நடைமுறையில் உள் ளது. எனினும், அதை முறைப் படுத்தி தேர்வு அறையில் மாணவர்களுக்கு வினாத்தாள் களை சரியாக வழங்கும் வகை யில் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக தேர்வுத்துறை தக வல் தெரிவித்துள்ளது குறிப் பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *