நாடாளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தம்

1 Min Read

புதுடில்லி,பிப்.9- நாடாளு மன்றத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அரசு கையகப்படுத்தும் நிலத் துக்கான இழப்பீட்டு தொகை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக் கையை வலியுறுத்தி நாடா ளுமன்ற முற்றுகை போராட் டத்தை நொய்டா விவசாயிகள் அறிவித்திருந்தனர்.
நொய்டா விவசாயிகளுக்கு ஆதரவாக உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து டில்லி நோக்கி ஆயிரக் கணக்கான விவசாயிகள் டிராக்டர் மற்றும் பேருந்துகளில் வந்தனர்.

நொய்டா அதிவிரைவுச் சாலையில் இருந்து டில்லி செல் லும் வழியில் தடுப்புகள் அமைத்து விவசாயிகளின் டிராக்டர்களை நொய்டா காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும், பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தில்லி நோக்கிச் செல்வதை தடுப்பதற்காக டில்லி எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *