வாஸ்துவா? மோசடியா? ஆசாமி கைது

1 Min Read

புதுடில்லி, பிப்.8 டில்லியில் உள்ள சபர்வால் டிரேடிங் கம்பெனி உரிமை யாளர் கமல் சர்பாவால் அளித்த புகாரின் படி பிரபல வாஸ்து நிபுணர் குஷ்தீப் பன்சால் மற்றும் அவரது சகோதரரை அசாம் மற்றும் டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து அசாம் காவல்துறையினர் கூறும் போது, ‘‘கமல் சர்பாவாலுக்கு குஷ் தீப் பன்சால் பலரை அறிமுகம் செய்து வைத்துள்ளார். ஆனால், அவர்கள் அனைவரும் கூட்டு சேர்ந்து ரூ.65 கோடிக்கு பண மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்தனர்.
கடந்த 1997-இல் அப்போதைய பிரதமராக இருந்த அய்.கே.குஜ்ரால் அரசு கவிழ்ந்தது. அதற்கு நாடாளுமன்ற கட்டடத்தின் நூலக அமைப்புசரியில்லை. வாஸ்து சரியில்லாததால் அவரது ஆட்சி கவிழ்ந்தது என்று குஷ்தீப் பன்சால் குறை கூறியது குறிப்பிடத்தக்கது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *