பீகார் மாநிலத்தில் பிஜேபியின் குதிரை பேர முயற்சி

1 Min Read

பாட்னா, பிப்.5- பீகாரில் காங்கிரஸ் மற்றும் ராஷ் டிரீய ஜனதா தளம் உடனான மெகா கூட்டணியின் ஆதரவுடன் முதலமைச்சராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் தனது பதவிலிருந்து விலகி பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதலமைச் சராகப் பதவியேற்றார். நிதிஷ்குமார் தலைமையில் புதிய ஆட்சி அமைந் துள்ளதால் அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டயாம் ஏற்பட்டுள்ளது. அதன்படி வருகிற 12-ஆம் தேதி பீகார் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. இந்த நிலையில் பீகார் மாநில காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தெலங்கானா தலைநகர் அய்தரா பாத்துக்கு அனுப்பி வைக்கப் பட்டனர். மொத்தம் உள்ள 19 சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரை தவிர 16 பேர் அய்தராபாத் அழைத்து செல்லப்பட்டு அங் குள்ள தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜனதா குதிரை பேரத்தில் ஈடுபடலாம் என்பதால் காங்கிரஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *