குரூப் 2 நேர்முகத் தேர்வு பிப்.12இல் தொடக்கம்

1 Min Read

சென்னை, பிப்.4- அரசுத் துறைகளில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் உட்பட குரூப் 2, 2ஏ பதவிகளில் உள்ள 6,151 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த 2022இல் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது.

இதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு முடிவு களும் வெளியிடப்பட்டுவிட்டன.

அதைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகொண்ட குரூப் 2 பதவிகளில் 161 பணியிடங்களுக்கு தகுதியானவர் களை தேர்வு செய்யும் பணிகள் கடந்த மாதம் தொடங்கின.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து நேர் முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட 327 பட்டதாரிகளின் பட்டியலை டிஎன்பி எஸ்சி 3.2.2024 அன்று வெளியிட்டது.
இவர்களுக்கு பிப்ரவரி 12 முதல் 17ஆம் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வர்கள், அனைத்து அசல் ஆவணங்களுடன் பங்கேற்க வேண்டும். ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைகூட சமர்ப்பிக்க தவறினால் அடுத்தகட்ட தேர்வுக்கு அனுமதி வழங்கப்படாது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *