இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம் நாகை மீனவர்கள் மீது தாக்குதல்

viduthalai
1 Min Read

நாகை, பிப்.4 நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக் குதல் நடத்திய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் பல் வேறு இன்னல்களை சந்தித்து வருகின் றனர். தொடரும் தாக்குதலால் மீனவர் கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்தவகையில் தற்போது இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டுழிய மும் அதிகரித்துள்ளது. மீன் பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி அவர்களின் பொருட்களை கொள்ளை யடிக்கும் நிகழ்வு தொடர் கதையாகி வருகிறது.

இந்நிலையில், நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆறு காட் டுதுறையில் இருந்து ராமன், பொன்னு துரைக்கு சொந்தமான 2 படகுகளில் சென்ற 5 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மீனவர்கள் மீது இலங்கை கடற் கொள் ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கத்தி முனையில் மிரட்டி மீன், நண்டு, ஜிபிஎஸ் கருவி, செல்போன் உள்ளிட்ட வற்றை இலங்கை கடற்கொள்ளையர்கள் பறித்துச் சென்றனர்.

இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கியது குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழுமத்தில் நாகை மீனவர்கள் புகார் அளித்துள்ளனர். மீனவர்களை தாக்கி, அவர்களிடம் இருந்து பொருட்களை கொள்ளை யடித்து செல்லும் இலங்கை கடற் கொள்ளையர்கள் மீது ஒன்றிய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனவர்கள் அச்சமின்றி மீன் பிடிக்க இந்திய கடற்படை ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று மீன வர்கள் வலியுறுத்தி உள்ளனர். வேதா ரண்யம் மீனவர்களின் புகாரை அடுத்து மீன்வளத்துறை, கடலோர காவல் குழும காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *