ஆண்டாள் சக்தியோ சக்தி!

viduthalai
1 Min Read

ஆண்டாள் சக்தியோ சக்தி!
சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் சிலைகள், கொடிமரங்கள் திருட்டு

சிறீவில்லிபுத்தூர், பிப். 4- சிறீ வில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் நிர்வாக அதி காரி முத்துராஜா மது ரையில் சிலை கடத்தல் தடுப்பு காவல் பிரிவில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப் பதாவது:-

சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் உள்பிரகாரத்தில் கல் யாண மண்டபம் உள் ளது. இந்த மண்டபத்தின் நுழைவுவாசலில் 2 யானை சிலைகள் இருந் தன. அழகான இந்த கற்சிலைகளை, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிருந்து காணவில்லை. மேலும் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற குட முழுக்கின்போது புதிய கொடி மரங்கள் அமைக் கப்பட்டன.
ஆண்டாள் கோவி லில் உள்ள 3 கொடி மரங் களும் புதிதாக அமைக்கப் பட்டு, பழைய கொடி மரங்கள் கோவில் வளா கத்தில் வைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒரு கொடிமரம் மட்டுமே உள்ளது. மற்ற 2 கொடி மரங்கள் காணாமல் போய் உள்ளன. எனவே யானை சிலைகள் மற்றும் கொடி மரங்களை கடத் திய நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும். சிலை களை கண்டுபிடித்து தர வேண்டும்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். ஆண்டாள் கோவில் சிலைகள், கொடி மரங்கள் கடத்தப்பட்டுள் ளது பக்தர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *