மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

viduthalai
1 Min Read

சென்னை, பிப். 3- தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப் பிடப்பட்டுள்ளதாவது,
காவிரி டெல்டா மாவட்டங்களில் பயிரி டப்பட்ட சம்பா பயிர்க ளைக் காத்திட மேட்டூர் அணையிலிருந்து இன்று (3.2.2024) முதல் இரண்டு டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட தமிழ்நாடு முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் வட கிழக்குப் பருவ மழைப் பொழிவு குறைவாகப் பெய்த காரணத்தாலும், காவிரி நதிநீர்ப் பற்றாக் குறையாலும், டெல்டா மாவட்டங்களில் பயிரி டப்பட்ட சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டு வருவ தால் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடக் கோரி விவசாயப் பெருமக்களிடமிருந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்க ளுக்கு கோரிக்கை கிடைக் கப் பெற்றதன் அடிப்ப டையில் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் சம்பா நெற்பயிரின் நிலையினை அறிந்திட தஞ்சாவூர், திரு வாரூர் மற்றும் நாகப்பட் டினம் மாவட்டங்களில், கிராம அளவில் 30 குழுக் கள் அமைக்கப்பட்டு, 298 கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த குழுக்களின் அறிக் கையின் அடிப்படையில், திருவாரூர் மாவட்டத்தில் 4,715 ஏக்கரும், நாகப் பட்டினம் மாவட்டத்தில் 18,059 ஏக்கரும், என மொத்தம் 22,774 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் பாசன நீர்ப்பற்றாக்குறை யால் பாதிக்கப்படும் என அறியப்பட்டுள்ளது.
எனவே, விவசாயப் பெருமக்களின் நலன் கருதி நெற்பயிரினைக் காத்திட, மேட்டூர் அணையி லிருந்து இரண்டு டிஎம்சி தண்ணீரை 3.2.2024 முதல் திறந்துவிட தமிழ் நாடு முதலமைச்சர் அவர் கள் உத்தரவிட்டுள்ளார். எனவே, விவசாயப் பெரு மக்கள் இப்பாசன நீரினை சிக்கனமாகப் பயன் படுத்தி சம்பா நெற்பயி ரைப் பாதுகாத்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– இவ்வாறு தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *