சென்னை பல்கலை.யில் இணைய வழியில் பி.காம், பிபிஏ…

1 Min Read

அரசியல்

சென்னை பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வி மய்யத்தின் மூலம், வரும் கல்வியாண்டு முதல் இணை யம் மூலம் பி.காம், எம்.காம், பிபிஏ ஆகிய மூன்றாண்டு இளநிலைக் கல்வியை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இணையம் மூலம் வகுப் புகளை நடத்தவும், தேர்வு களை நடத்தவும் திட்டமிடப் பட்டிருப்பதாகவும், காட்சிப் பதிவு (வீடியோ) மூலம் வகுப் புகளை நடத்துவதற்கான ஏற் பாடுகளை அவுட்சோர்சிங் முறையில் செய்து கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, பொது நிர் வாகம், பொருளாதாரவியல், வணிகவியல் என 3 இளநிலை மற்றும் 6 முதுநிலை படிப்பு களை இணைய வழி மூலம் வழங்குவது குறித்து ஆலோ சிக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு கார ணங்களால், முதல் கட்டமாக மூன்று படிப்புகளை இணைய வழி மூலம் வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த மூன்று இணைய வழி படிப்புகளுக்கான விண் ணப்பங்கள், வகுப்புகள் போன்ற அனைத்துமே இணைய வழி மூலமே நடை பெறும் என்றும், மாணவர்கள் எங்கிருந்தும், இந்த இணைய வழி கல்வியை பெறலாம் என்றும் பல்கலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *