தென்காசி மாவட்டம் கொடிகுறிச்சியில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு நாள்:

Viduthalai
1 Min Read

தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம்

அரசியல்

தென்காசி, அக்.11 தென்காசி மாவட்ட பகுத்தறிவாளர் கழகமும், கொடிக்குறிச்சி யு.எஸ்.பி. பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து டாக்டர் நரேந்திர தபோல் கரின் நினைவு நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் மனப்பான்மை விளக்க கருத்தரங்கம் 1.9.2023, நண் பகல் 1.30 மணி அளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு கல்லூரி தலைவர்

யு.செல்வராஜ் தலைமை தாங்கி உரை யாற்றினார். மாநில ப.க. அமைப்பாளர் கே.டி.சி.ச.குருசாமி, மாவட்ட ப.க. தலைவர் முனைவர்ஜி.எஸ்.எஸ்.நல்ல சிவம், கல்வியில் கல்லூரி முதல்வர் ஸ்டெல்லாமேரி ஆகியோர் முன்னிலை வைத்தனர். 

திராவிடர் கழகக் காப்பாளர் சீ.டேவிட் செல்லத்துரை  வழிகாட்டுதல் உரையாற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் சி.தங்கலட்சுமி அனை வரையும் வரவேற்று, சால்வை அணி வித்தார். மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் த.வீரன் தொகுப்புரை வழங்கினார். மாவட்ட ப.க. செயலாளர் ஆலடி எழில்வாணன், நிர்வாக இயக் குநர், ஆலடி அருணா கல்விக்குழுமம் மாணவியர்களிடையே பெரியார் பற்றிய வினாடி – வினா நடத்தி பெரியார் புத்தகங்களைப் பரிசளித்தார். 

அரசியல்

மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர் முனைவர் வா.நேரு  மாணவிகளிடையே ‘‘பேய், பிசாசு” பற்றிய பித்தலாட்டங்களை விளக்கி கூறினார். ம.தி.தா. இந்துக் கல்லூரி பேராசிரியர் ஆ.திருநீலகண்டன் நரேந்திர தபோல்கரின் வாழ்வியல் சிந்தனைபற்றி உரையாற்றினார்.

உரையாற்றிய மூவரும் பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை, தேசிய அறிவியல் மனப்பான்மை ஆகியவற்றை மாணவியர்களிடையே சிறப்பாக விளக்கினர். 300 மாணவியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி தலைவர், முதல்வர் ஆகியோருக்கு மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக பெரியார் புத்த கங்கள் அளிக்கப்பட்டது. 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *