திருவள்ளூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

viduthalai
1 Min Read

திருத்தணி, பிப். 1- 27.-01.-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திருத்தணியில் பொதட்டூர் புவியரசன் இல்லத்தில் பொறுப்பா ளர்கள் கலந்துரையாடல் மாவட்ட தலைவர் வழக்குரைஞர் மா.மணி தலைமையில் மாவட்ட செயலாளர் கோ.கிருஷ் ணமூர்த்தி, அறிவுச்செல் வன் ஆகியோரின் முன்னி லையில் சிறப்பாக நடந்தது.
மாநில பகுத்தறிவா ளர் கழக அமைப்பாளர் சி.நீ.வீரமணி,பெரியார் பெருந்தொண்டர் பொதட்டூர் புவியரசன், ராணிப்பேட்டை மாவட்ட தலைவர் சு. லோகநாதன் ஆகியோ ரின் கருத்துரைகளை அடுத்து இறுதியாக தலைமைக்கழக அமைப் பாளர் பு.எல்லப்பன் உரையில் கழக தெரு முனை பிரச்சாரம்,புதிய கிளைக்கழகங்கள், மீண்டும் அதிக அளவில் உறுப்பினர்களை உரு வாக்க வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் அனை வரின் ஒத்துழைப்புடன் விரைவில் அந்த அள வுக்கு மாவட்டத்தை உருவாக்க பாடுபடுவோம் என்று நிறைவு செய்தார்.
முன்னதாக செயல வைத் தலைவர் சு.அறிவுக் கரசு அவர்களின் மறை விற்கு ஒரு நிமிடம் அமைதி மரியாதை செலுத்தி தீர்மா னங்களை தலைமைக்கழக அமைப் பாளரின் உரையில் கூறிய படி வாசிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *