தமிழ்நாடு சட்டப்பேரவை பிப்ரவரி 12இல் தொடங்குகிறது

viduthalai
1 Min Read

சென்னை, பிப். 1- தமிழ்நாடு சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. அதன்படி, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி பல்வேறு கூட்டத் தொடர்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், 2024ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ஆம் தேதி தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 19ஆம் தேதி தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், 20ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தொடரை 3 நாட்கள் நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *