கருநாடக மாநிலத்தில் பெயர் பலகைகளில் கன்னடம் ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை!

1 Min Read

பெங்களூரு, பிப்.1- கருநாடக அரசுகடந்த 5ஆம் தேதி வணிக நிறுவனங்களின் பெயர் பலகை களில் 60 சதவீதம் கட்டாயம் கன் னடத்தில் எழுதி இருக்க வேண் டும் என அவசரச் சட்டம் கொண்டுவந்தது. மேலும், பிப்ரவரி 28‍ஆம் தேதிக்குள் கன்னடத்தில் பெயர் பலகை வைக்காத நிறு வனங்களுக்கு அபராதம் விதிக்கப் படும் எனவும் உத்தரவிட்டது. கருநாடக அரசு கொண்டு வந்த அவசரச் சட்ட மசோதாவுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப் புதல் பெறப்பட்ட‌து.

இந்த அவசர சட்டத்துக்கு ஒப் புதல் தராமல் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் நிராகரித்துள்ளார். மேலும் இதை சட்டப் பேரவையில் நிறைவேற்றுமாறு திருப்பி அனுப் பியுள்ளார். இதற்கு காங்கிரசாரும், கன்னட அமைப்பினரும் கண் டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கருநாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் கூறுகையில், “கருநாடகாவின் முதன்மையான பிரச்சினையை புரிந்துக் கொள்ளாமல் ஆளுநர் தவறான முடிவை எடுத்துள்ளார். இந்தப் பிரச்சினை கருநாடகாவின் க‌வுரவம்சார்ந்தது என்பதால் ஆளுநர் தன‌து முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *