இந்தியாவில் புதிதாக 124 பேருக்கு கரோனா பாதிப்பு

1 Min Read

புதுடில்லி,ஜன.31- இந்தியா வில் புதிதாக 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட் டுள்ள நிலையில், கரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண் ணிக்கை 1,415 ஆக உள்ளது.
இந்தியாவில் கரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வரு கிறது. அதன்படி, நேற்று (30.1.2024) 112 பேருக்கு கரோனா பாதித்த நிலையில், கடந்த 24மணி நேரத்தில் புதிதாக 124 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண் ணிக்கை 4,50,25,312 ஆக உயர்ந் துள்ளது. நாடு முழுவதும் கரோ னாவுக்கு சிகிச்சை பெறு வோரின் எண்ணிக்கை 1,415 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு எதுவும் இல்லை. இந்தியாவில் கரோனா வுக்கு பலியானோர் எண் ணிக்கை 5,33,445 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 169 பேர் குணமடைந்த நிலை யில், இதுவரை மொத்தம் 4,44,90,452 பேர் நோய்த் தொற் றில் இருந்து குணமடைந் துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.67 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஒன் றிய சுகாதாரத்துறை அமைச் சகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *