பரவாயில்லையே! மனுவில் ஜாதி, மதம் கூடாது உச்ச நீதிமன்றம் உத்தரவு

1 Min Read

புதுடில்லி, ஜன. 30- ‘நீதிமன்ற வழக்குகளில், மனுதாரர் களின் ஜாதி அல்லது மதத்தை குறிப்பிடும் நடைமுறை இனி தவிர்க்கப்பட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
ராஜஸ்தான் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, கணவன் – மனைவி இடையிலான சச்சரவு தொடர்பான வழக்கை, இடமாற்றம் செய்யும் மனுவை விசாரணைக்கு ஏற்ற போது, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

இது குறித்து நீதிபதிகள் ஹிமா கோஹ்லி, அசானுதீன் அமானுல்லா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழமை நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் வழக்கு களில், வாதி – பிரதிவாதியின் ஜாதி அல்லது மதம் தொடர்பான விவரங்கள் இடம் பெறுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகள் வழக்கு விசாரணைக்கு தேவையற்றதாக நீதிமன்றம் கருதுகிறது. இனி வரும் காலங்களில், வாதி – பிரதிவாதிகளின் ஜாதி, மத விபரங் களை மனுவில் குறிப்பிடும் வழக்கத்தை நீதிமன்றங்கள் தவிர்க்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு உத்தர வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

TAGGED:
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *