2024 பொதுத் தேர்தலில் வாக்குச் சீட்டு பயன்படுத்த வேண்டும் காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கருத்து:

viduthalai
1 Min Read

புதுடில்லி, ஜன. 30- மக்களவைத் தேர்தலுக்கு காகித வாக்குச் சீட்டுகளைப் பயன் படுத்த வேண்டும் என்றும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை ஹேக் செய்யலாமா வேண்டாமா என்ற விவாதத்திற்கு நேரம் முடிந்துவிட்டது என்றும் கூறினார். செய்தியாளர் சந்திப் பில் பேசிய பிட்ரோடா, காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷுக்கு சமீபத்தில் அளித்த பதில் உட்பட, வாக்கு இயந்திரம் மற்றும் ஒப்புகைச் சீட்டு (ணிக்ஷிவி மற்றும் க்ஷிக்ஷிறிகிஜி கள்) குறித்து எழுப்பப்பட்டக் கேள்விகளுக்கு தேர்தல் ஆணை யம் பதிலளிக்கவில்லை மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள தால், அந்த பிரச்சினைகளை விவாதிக்கும் நேரம் போய்விட்டது. “ஒரு பெரிய நம்பிக்கை பற்றாக்குறை உள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் என்ன நினைக்கிறது என்பது முக்கியமல்ல, இந்திய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்… இன் றைய ஒரே வழி, என்னைப் பொறுத்தவரை, காகித வாக்குச்சீட்டு தான்,”
பிட்ரோடா பின்னர், தான் காங்கிரஸின் சார்பாக பேச வில்லை, மாறாக “அக்கறையுள்ள குடிமகன்” என்ற முறையில் இந்த கருத்தினைதெரிவிப்பதாகக் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *