‘கேலோ இந்தியா’ தாங்டா விளையாட்டுப் போட்டி: வீராங்கனைகள் வெற்றி!

1 Min Read

கோவையில் நடைபெற்ற கேலோ இந்தியா தாங்டா போட்டியில் மகாராட்டிரா, ராஜஸ்தான் வீரர்கள் வெற்றிபெற்றனர்.
கோவையில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளின் ஒரு பிரிவாக தாங்டா போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் அரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, அஸ்சாம், மணிப்பூர் உள்ளிட்ட 16 மாநிலங்களைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதில், திங்கள்கிழமை நடைபெற்ற 18 வயது பிரிவில் 56 கிலோ எடை பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றன. முதல் போட்டியில் மகாராட்டிர வீரர் வைபவ் ஹேமந்த் 33-22 என்ற புள்ளிக் கணக்கில் பிகார் வீரர் சுபம் தேயை வீழ்த்தினார்.

2-ஆவது போட்டியில் ராஜஸ்தான் வீரர் அனில் சுரேஷ், லடாக் வீரர் முகமது முஸ்தபாவுடன் மோதினார். இதில், அனில் சுரேஷ் 26-13 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
3-ஆவது போட்டியில் திரிபுரா வீரர் ஷகீல் நாத்தை மணிப்பூர் வீரர் கன்குஜன் சனந்த் சிங் 31-23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றார்.
தொடர்ந்து இறுதிச் சுற்றுகள் இன்று (30.1.2024) நடைபெற்று, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *