நாளை கூடுகின்றது நாடாளுமன்றம் பிப்ரவரி ஒன்றில் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

புதுடில்லி, ஜன.30 குடியரசுத் தலைவர் உரையுடன் நாடா ளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (31.1.2024) தொடங்குகிறது. இதை யொட்டி இன்று அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள் ளது.
பிப்ரவரி 1-ஆம் தேதி இடைக்கால நிதி நிலையறிக் கையை ஒன்றிய நிதி அமைச் சர் நிர்மலா சீதாராமன் தாக் கல் செய்கிறார்.
மக்களவை தேர்தல் விரை வில் நடைபெற உள்ளதால், இதில் பல சலுகைகள், புதிய திட்டங்கள், வரிக்குறைப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி (நாளை) தொடங் குகிறது. ஆண்டின் முதல் கூட் டம் என்பதால், இது மக்க ளவை, மாநிலங்களவையின் கூட்டுக் கூட்டமாக அமையும். ஜனவரி 31ஆ-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத் தில் குடியரசுத் தலைவர் திர வுபதி முர்மு உரை நிகழ்த் துவார்.
இதைத் தொடர்ந்து, இடைக் கால நிதி நிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் நிர் மலா சீதாராமன் பிப்ரவரி
1-ஆம் தேதி தாக்கல் செய்கிறார்.

இதற்கிடையே, நாடாளு மன்ற கூட்டத் தொடர் தொடங்குவதை முன்னிட்டு, இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறிய போது,
‘‘நாடாளுமன்ற பட் ஜெட் கூட்டத் தொடர் தொடங் குவதையொட்டி ஜனவரி 30-ஆம் தேதி அனைத் துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் கூட்டத் தொடரை அனைத்துக் கட்சி களும் அமைதியான முறை யில் நடத்தித் தர வேண்டும்’’ என்றார். ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடை பெறும் என்று எதிர் பார்க்கப் படும் சூழலில், ஒன்றிய பாஜக அரசின் கடைசி கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ஆம் தேதி (நாளை) தொடங்கி பிப்ரவரி 9ஆ-ம் தேதி வரை நடைபெற வாய்ப்பு உள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *