ஜெய்ப்பூர், ஜன. 30- பள்ளி நிகழ்ச்சியின் போது பெண்கள் ஹிஜாப் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜ சட்டமன்ற உறுப்பினர் பால்முகுந்த் ஆச்சார்யா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இசு லாமிய மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராஜஸ்தானில் பா.ஜ ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள ஹவா மஹால் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பால் முகுந்த் ஆச்சார்யா. பா.ஜவை சேர்ந்த இவர் ஜன.26ஆம் தேதி அங்குள்ள அரசு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது ஏராள மான மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்திருந்ததை கண்டு கோபமடைந்த அவர், “இது என்ன முஸ்லீம் நாடா இங்கே மாணவிகள் ஹிஜாப் அணிந்து கொண்டு வர” என்று கூறியது மட்டு மல்லாமல், பொதுமேடையிலேயே முஸ்லீம் மாணவிகளை கொச்சையாக பேசி, ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவிகள் மற்றும் அவர்களது குடும் பத்தினர் நேற்று (29.1.2024) சுபாஷ் சவுக் காவல் நிலையத்திற்கு வெளியே சாலையை மறித்து பாஜ சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். மாணவிகளை அவ தூறாக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என் றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆதர்ஷ் நகர் தொகுதியின் காங்கிரஸ் சட்ட மன்ற உறுப்பினர் ரபீக் கானும், ராஜஸ் தான் சட்டமன்றத்தில் இந்த பிரச் சினையை எழுப்ப முயன்றார். ஆனால் சட்டமன்ற தலைவர் அவரை பேச அனுமதிக்கவில்லை.