கால்நடைகள் மூலம் கேரளாவில் பரவும் நோய்

1 Min Read

திருவனந்தபுரம், அக். 12- திருவனந்தபுரத்தை சேர்ந்த தந்தை, மகனுக்கு கால்நடைகள் மூலம் பரவும் புளூசெல்லோசிஸ் என்ற நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆடு, மாடு, பன்றி ஆகிய கால்நடைகள் மூலம் மனிதர்களுக்கு புளூசெல்லோசிஸ் என்ற ஒரு வகை நோய் பரவுகிறது. 

திருவனந்தபுரம் வட்டப்பாறையை சேர்ந்த ஜோஸ், அவரது மகன் ஜோபி ஆகியோருக்கு இந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜோஸ் தன்னுடைய வீட்டில் பசுக்களை வளர்த்து வருகிறார். இவற்றில் இருந்து தான் இந்த நோய் 2 பேருக்கும் பரவியிருக்கலாம் என்று கருதப் படுகிறது. ஆனால் பசுக்களுக்கு பரிசோதனை நடத்திய போது அவற்றுக்கு நோய் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஜோஸ் மற்றும் ஜோபி சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *